அசை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 44: வரிசை 44:
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.


: ''கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி''


: '''"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி"'''
இங்கே முதற்சீரான ''கேளிர்'' என்பதில் முதலெழுத்தான ''கே'' இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் ''கே'' தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் ''போ'' தனியாகவே அசையாகும்.



மூன்றாவது சீரான ''கேள்கொளல்'' என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான ''கே''யே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ''ள்'' ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து ''கேள்'' என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் ''வே'' உம் ''ண்'' உம் சேர்ந்து ''வேண்'' என அசையாகும்.
இங்கே முதற்சீரான '''கேளிர்''' என்பதில் முதலெழுத்தான '''கே''' இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் '''கே''' தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் '''போ''' தனியாகவே அசையாகும்.

மூன்றாவது சீரான '''கேள்கொளல்''' என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான '''கே'''யே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து '''ள்''' ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து '''கேள்''' என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் '''வே''' உம் '''ண்''' உம் சேர்ந்து '''வேண்''' என அசையாகும்.


[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]

15:35, 30 சனவரி 2006 இல் நிலவும் திருத்தம்

யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் சேர்க்கையினால் உருவாகும் ஓர் உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.

கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி.

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

இங்கே அருந்திறல், அணங்கின், ஆவியர், பெருமகன் என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும்.

அருந்திறல் - அருந் திறல்
அணங்கின் - அணங் கின்
ஆவியர் - ஆ வியர்
பெருமகன் - பெரு மகன்

மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை அவதானித்தால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களை நீக்கிப் பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஒரு ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும். யாப்பிலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளபடி அசைகள் அமையும் முறைகள் வருமாறு.

முதல் எழுத்து இரண்டாம் எழுத்து மூன்றாம் எழுத்து எடுத்துக்காட்டு
குறில் - - அ, க
நெடில் - - ஆ, பூ
குறில் ஒற்று - அன், விண்
நெடில் ஒற்று - ஆள், தீர்
குறில் குறில் - அடி, மன
குறில் நெடில் - அடா, புகா
குறில் குறில் ஒற்று அடர், திகில்
குறில் நெடில் ஒற்று அதால், தொழார்

மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் நேரசை என்றும் ஏனையவை நிரையசை என்றும் குறிப்பிடப்படுகின்றன.

அசை பிரிப்பு

செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.

ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.

கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.


"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி"


இங்கே முதற்சீரான கேளிர் என்பதில் முதலெழுத்தான கே இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் கே தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் போ தனியாகவே அசையாகும்.

மூன்றாவது சீரான கேள்கொளல் என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான கேயே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ள் ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கேள் என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் வே உம் ண் உம் சேர்ந்து வேண் என அசையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசை_(யாப்பிலக்கணம்)&oldid=26395" இலிருந்து மீள்விக்கப்பட்டது