நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"Queen Aishwarya of Nepal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார். |
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார். |
||
== நேபாளத்தின் ராணி == |
|||
== Queen of Nepal == |
|||
1972 இல் ராஜா மகேந்திர இறந்த பிறகு , [[பிரேந்திரா]] ராஜா ஆனார், ஐஸ்வர்யா தற்காலிக ராணி ஆனார். |
1972 இல் ராஜா மகேந்திர இறந்த பிறகு , [[பிரேந்திரா]] ராஜா ஆனார், ஐஸ்வர்யா தற்காலிக ராணி ஆனார். |
||
18:00, 6 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்
Queen Aishwarya | |||||
---|---|---|---|---|---|
Queen Aishwarya in 1972 | |||||
Queen consort of Nepal | |||||
Tenure | 31 January 1972 – 1 June 2001 | ||||
முடிசூட்டுதல் | 24 February 1975 | ||||
பிறப்பு | Lazimpat Durbar, Kathmandu, Kingdom of Nepal | 7 நவம்பர் 1949||||
இறப்பு | 1 சூன் 2001 Narayanhity Royal Palace, Kathmandu, Kingdom of Nepal | (அகவை 51)||||
துணைவர் | King Birendra of Nepal (m. 1969 - 2001; their deaths) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | King Dipendra Princess Shruti Prince Nirajan | ||||
| |||||
மரபு | Rana | ||||
தந்தை | General Kendra Shumsher Jang Bahadur Rana | ||||
தாய் | Shree Rajya Lakshmi Devi Shah | ||||
மதம் | Hinduism |
ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா (நேபாளி: ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாஜிம்பட் தர்பாரில் கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா மற்றும் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர். நேபாள் ராணியாக 1972 ல் இருந்து 2001 வரை இருந்தார். படா மகாராணி எனவும் அழைக்கப்பட்டார் . இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி ஸ்ருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அவர் பாரம்பரிய அழகுவுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். அவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம்.
கல்வி
இந்தியாவில் உள்ள செயின்ட் ஹெலென்ஸ் கான்வென்ட் ஆப் குரஸூங் இல் பள்ளி படிப்பை முடித்தார்.1963 இல் கண்டி ஐஸ்வரி ராஜ்ய லட்சுமி மேல் நிலை பள்ளியில் எஸ் எல் சி தேர்வுபெற்றார். 1967 இல் பத்மகன்யா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
குடும்பம்
ராணி ஐஸ்வர்யா, நேபாலை 104 ஆண்டுகள் ஆண்ட ராணா வம்சத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி ப்ரேக்ஷ்யா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாலை திறம்பட ஆண்டனர். 1969 இல் ராஜா பிரேந்திராவை மணந்தார்.
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார்.
நேபாளத்தின் ராணி
1972 இல் ராஜா மகேந்திர இறந்த பிறகு , பிரேந்திரா ராஜா ஆனார், ஐஸ்வர்யா தற்காலிக ராணி ஆனார்.
ராணி ஐஸ்வர்யா மிகவும் ஆற்றல் உடையவராகவும் , வெளிப்படையாக பேசுகின்ற அழகிய புத்திசாலி. அவர் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.
ராணி ஐஸ்வர்யா அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண். நாட்டுமக்களுக்கு தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் ஜனநாயகம் இறுதியாக வந்தது.
நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரை கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்ல செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது. [1]
இலக்கிய படைப்புகள்
அவர் இலக்கிய ஆர்வம் சாந்தினி ஷா என்ற புணை பெயரில் எழுதினார். அவரது கவிதைகள் 'அப்னை ஆகாஷ் அப்னை பரிபேஷ்' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டன.அவர் ஒரு பிரபலமான பாடல் இசையமைப்பாளர் மற்றும் அவரது பாடல்கள் அடிக்கடி வானொலி நேபால் மற்றும் நேபால் தொலைக்காட்சி. மூலம் ஒளிபரப்பப்பட்டது.
மரணம்
நேபாள அரசுப் படுகொலைகள் 1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.[2]
Honours
National
References
- ↑ "Aishwarya: Nepal's forceful queen". 5 June 2001. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018 – via news.bbc.co.uk.
- ↑ Amy Willesee & Mark Whittaker (2004). Love & Death in Kathmandu A Strange Tale of Royal Murder, 1st U.S. ed. New York : St. Martin's Press, 2004. ISBN 1-84413-558-6 / 1-84413-558-6