முதலாம் யசீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AGILESWARANGOVINDஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
| full name =யாசித் இப்னு முஆவியா
| full name =யாசித் இப்னு முஆவியா
| predecessor =[[முதலாம் முஆவியா]]
| predecessor =[[முதலாம் முஆவியா]]
| successor !lock4272REY RCODE MAAAALLYKFUTH#=[[இரண்டாம் முஆவியா]]
| successor =[[இரண்டாம் முஆவியா]]
| dynasty =[[உமய்யா கலீபகம்]]
| dynasty =[[உமய்யா கலீபகம்]]
| father =[[முதலாம் முஆவியா]]
| father =[[முதலாம் முஆவியா]]

08:23, 30 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

முதலாம் யசீத்
உமய்யா கலீபா
ஆட்சி680 – 683
முன்னிருந்தவர்முதலாம் முஆவியா
பின்வந்தவர்இரண்டாம் முஆவியா
முழுப்பெயர்
யாசித் இப்னு முஆவியா
அரச குலம்உமய்யா கலீபகம்
தந்தைமுதலாம் முஆவியா
தாய்மைசூன்

முதலாம் யசீத் (Yazid I, அரபி: يزيد بن معاوية بن أبي سفيان), முதலாம் முஆவியாவின் மகனும், உமைய்யா கலீபகத்தின் இரண்டாவது கலீபாவும் ஆவார். யூலை 23, 645ல் பிறந்தார். தாயார் பெயர் மைசூன். இவர் தனது தந்தையின் மரணத்திற்க்குப் பின் 680ல் அடுத்த கலீபாவாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். இவரின் தலைமையை ஏற்க மறுத்த கலீபா அலீயின் மகனும், முகம்மது நபியின் பேரனுமாகிய உசேனை கொலை செய்ய உத்திரவிட்டார். இதன் படி கர்பலா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் உசேன் கொல்லப்பட்டார். இசுலாத்தின் சன்னி மற்றும் சியா பிரிவின் காரணிகளில் இந்த போர் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த யாசித், 683ல் இறந்தார். இறக்கும் பொழுது யாசித்தின் வயது 38 மட்டுமே.

யாசித்தின் ஆட்சியில் இசுலாமிய படைகளுக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. பெர்பர்கள் எனப்படும் பழங்குடி சேனைகளிடம், வட ஆப்பிரிக்க பகுதிகளை இவரது ராணுவம் இழந்தது. இதன் மூலம் மத்திய தரைகடல் பகுதில் நிலவி வந்த இசுலாமிய மேலாதிக்க தனமும் கட்டுப்படுத்தப் பட்டது. தன்னை எதிர்த்த அப்துல்லா இப்னு சுபைர் என்பவரை சிறை பிடிக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது புனித காபா சிறிது சேதமடைந்தது. இது போன்ற நடவடிக்கைகள் காரனமாக இவர் இசுலாமியர்களில் அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகினார்.

இவரின் மறைவுக்கு பின்பு, இவரது மகன் இரண்டாம் முஆவியா அடுத்த கலீபாவாக ஆட்சி பொறுப்பேற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_யசீத்&oldid=2570600" இலிருந்து மீள்விக்கப்பட்டது