மு. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 41: | வரிசை 41: | ||
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]] |
| party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க.]] |
||
| party_position= தலைவர் |
| party_position= தலைவர் |
||
| birth_date ={{Birth date |
| birth_date ={{Birth date|1924|6|3|mf=y}} |
||
| birth_place =[[திருக்குவளை]], [[தமிழ்நாடு]] |
| birth_place =[[திருக்குவளை]], [[தமிழ்நாடு]] |
||
| death_date = {{death date and age|2018|8|7|1924|6|3|mf=y}} |
|||
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
|||
| residence =[[சென்னை]] |
| residence =[[சென்னை]] |
||
| spouse =பத்மாவதி<br />தயாளு<br />ராசாத்தி |
| spouse =பத்மாவதி<br />தயாளு<br />ராசாத்தி |
||
வரிசை 51: | வரிசை 53: | ||
| source = http://www.tn.gov.in/tnassembly/mkarunanidhi.htm தமிழ்நாடு அரசு |
| source = http://www.tn.gov.in/tnassembly/mkarunanidhi.htm தமிழ்நாடு அரசு |
||
}} |
}} |
||
'''முத்துவேல் கருணாநிதி''' (''M. Karunanidhi'', |
'''முத்துவேல் கருணாநிதி''' (''M. Karunanidhi'', சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] தலைவரும் முன்னாள் [[தமிழக முதல்வர்|தமிழக முதல்வரும்]] ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது [[எம். ஆர். ராதா]], இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். |
||
== இளமைப்பருவம் == |
== இளமைப்பருவம் == |
||
வரிசை 253: | வரிசை 255: | ||
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள்]] |
||
[[பகுப்பு:1924 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1924 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:2018 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள்]] |
||
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]] |
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்]] |
13:26, 7 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
முத்துவேல் கருணாநிதி | |
---|---|
2007-இல் கருணாநிதி | |
14-ஆம் தமிழக முதல்வர் | |
பதவியில் மே 13, 2006 – மே 16, 2011 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | சேப்பாக்கம் |
12-ஆம் தமிழக முதல்வர் | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
முன்னையவர் | ஜெ. ஜெயலலிதா |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | சேப்பாக்கம் |
10-ஆம் தமிழக முதல்வர் | |
பதவியில் 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 | |
முன்னையவர் | ஜானகி இராமச்சந்திரன் |
பின்னவர் | ஜெ. ஜெயலலிதா |
தொகுதி | துறைமுகம் |
4-ஆம் தமிழக முதல்வர் | |
பதவியில் 15 மார்ச்சு 1971 – 31 ஜனவரி 1976 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
3-ஆம் தமிழக முதல்வர் | |
பதவியில் 10 பேப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | சைதாப்பேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருக்குவளை, தமிழ்நாடு | சூன் 3, 1924
இறப்பு | ஆகத்து 7, 2018 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 94)
அரசியல் கட்சி | தி.மு.க. |
துணைவர்(s) | பத்மாவதி தயாளு ராசாத்தி |
பிள்ளைகள் | முத்து அழகிரி மு. க. ஸ்டாலின் செல்வி தமிழரசு கனிமொழி |
வாழிடம் | சென்னை |
As of ஜூன் 14, 2009 மூலம்: தமிழ்நாடு அரசு |
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.
இளமைப்பருவம்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்[சான்று தேவை]. நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் [1]. தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசோலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.[2][3]
அரசியல்
மாணவர் மன்றம்
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை " மாணவ நேசன் "என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் [4] மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக "தமிழ்நாடு மாணவர் மன்றம்" என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.
முரசொலி நாளிதழ்
இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, [5] கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. [6][7]
ஆண்டு | தொகுதி | வாக்கு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்கு | வாக்கு வேறுபாடு |
1957 | குளித்தலை | 22785 | கே. எ. தர்மலிங்கம் | காங்கிரசு | 14489 | 8296 |
1962 | தஞ்சாவூர் | 32145 | பரிசுத்த நாடார் | காங்கிரசு | 30217 | 1928 |
1967 | சைதாப்பேட்டை | 53401 | எஸ். ஜி. வினாயகமூர்த்தி | காங்கிரசு | 32919 | 20482 |
1971 | சைதாப்பேட்டை | 63334 | என். காமலிங்கம் | காங்கிரசு | 50823 | 12511 |
1977 | அண்ணா நகர் | 43076 | ஜி. கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 16438 | 16438 |
1980 | அண்ணா நகர் | 51290 | எச். வி. ஹண்டே | அதிமுக | 50591 | 699 |
1989 | துறைமுகம் | 41632 | கே. எ. வகாப் | முஸ்லீம் லீக் | 9641 | 31991 |
1991 | துறைமுகம் | 30932 | கே. சுப்பு | காங்கிரசு | 30042 | 890 |
1996 | சேப்பாக்கம் | 46097 | S. S. நெல்லை கண்ணன் | காங்கிரசு | 10313 | 35784 |
2001 | சேப்பாக்கம் | 29836 | தாமோதரன் | காங்கிரசு | 25002 | 4834 |
2006 | சேப்பாக்கம் | 34188 | தாவுத் மியாகான் | சுயேச்சை | 25662 | 8526 |
2011 | திருவாரூர் | 109014 | எம்.இராசேந்திரன் | அதிமுக | 58765 | 50249 |
2016 | திருவாரூர் | 121473 | பன்னீர்செல்வம் | அதிமுக | 53107 | 68366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் |
வெற்றிகள்
1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
- 1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
- 1971-1976—இரண்டாவது முறையாக
- 1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
- 1996-2001—நான்காம் முறை ஆட்சி
- 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
அரசு நிர்வாகம்
மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.
விமர்சனங்கள்
1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[8],[9] [10][தொடர்பிழந்த இணைப்பு]
1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன் [11] [12]
1973 ல் மிசா
1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. {{citation}}
: Empty citation (help)
குடும்பம்
மனைவிகள்
|
மகள்கள்
|
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.
இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.
திரைப்படத் துறைப் பங்களிப்புகள்
20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி அவருக்கு மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார்.
நாடகத் துறைக்கான பங்களிப்புகள்
- பழனியப்பன்
- சிலப்பதிகாரம்
- மணிமகுடம்
- ஒரே ரத்தம்
- தூக்கு மேடை
- "பரப்பிரம்மம்"
- காகிதப்பூ
- நானே அறிவாளி
- வெள்ளிக்கிழமை
- உதயசூரியன்
- நச்சுக் கோப்பை
இலக்கியப் பங்களிப்புகள்
வரலாற்றுப்புனைவுகள்
புதினங்கள்
- வெள்ளிக்கிழமை
சிறுகதைகள்
- சங்கிலிச்சாமியார்
உரைநூல்கள்
இலக்கிய மறுபடைப்புகள்
- குறளோவியம்
- சங்கத் தமிழ்
- தாய்
- தொல்காப்பியப்பூங்கா
தன்வரலாறு
சொற்பொழிவுகள்
கட்டுரைகள்
- உணர்ச்சிமாலை
- திராவிடசம்பத்து
பயணக்கட்டுரைகள்
விருதுகளும், பெற்ற சிறப்புகளும்
- உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.
- கருணாநிதி 1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார்.
- 1987 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
- 2010 ஆம் ஆண்டு, ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ Karunanidhi shares dais with Sai Baba
- ↑ "முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உலக கலை படைப்பாளி விருது - திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழங்கியது" (in (தமிழில்)). 10 அக்டோபர் 2009. http://www.dailythanthi.com/article.asp?NewsID=519415. பார்த்த நாள்: 15 அக்டோபர் 2009.
வெளி இணைப்புகள்
- தரமுயர்த்தப்பட வேண்டிய கட்டுரைகள்
- Pages using infobox officeholder with unknown parameters
- CS1 errors: empty citation
- தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
- தமிழக எழுத்தாளர்கள்
- திராவிட இயக்க எழுத்தாளர்கள்
- தமிழ் இறைமறுப்பாளர்கள்
- 1924 பிறப்புகள்
- 2018 இறப்புகள்
- இராசராசன் விருது பெற்றவர்கள்
- நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்
- தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
- மு. கருணாநிதி
- இந்திய இறைமறுப்பாளர்கள்
- கருணாநிதி குடும்பம்
- 15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்