கண்டோபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Khandoba" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:21, 12 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

கண்டோபா (IAST: Khaṇḍobā) என்றும் மார்த்தாண்ட வைரவர்  என்றும் மல்லாரி என்றும்  அழைக்கப்படுபவர்,  தக்காணப் பகுதியில் சிவாம்சமாக வழிபடப்படும் ஒரு நாட்டார் தெய்வம் ஆவார்.  மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா தெலங்கானா பகுதிகளில் இவர் பல  சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிறார்.[1] இச்சமூகங்களில் போர், அந்தணர், வேளாண், வேடுவர், ஆதிதிராவிடர் ஏன் முஸ்லீம்களும்  என்று பலதரப்பட்ட இனக்குழுமங்கள் அடங்கும்.  கண்டோபா வழிபாட்டில் இந்து மற்றும் ஜெயின் மரபுகளின் கலப்பைக் காணமுடிகின்றது.  கண்டோபா வழிபாடானது, பொ.பி 9 மற்றும் 10 நூற்றாண்டுகளுக்கு இடையே சிவன், முருகன், சூரியன் முதலான பல்வேறு தெய்வங்களின் கலப்பால் உருவாகி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கிஅ நிலவுகிறது. குதிரையில் அல்லது எருதில் இவர்கின்ற போர்வீரராகவோ, அல்லது இலிங்கத்தின் வடிவிலோ கண்டோபா சித்தரிக்கப்படுகிறார்.மல்லாரி மான்மியத்தில் புகழப்படும் கண்டோபா தெய்வத்தின் முதன்மையான வழிபாட்டு மைய நிலமாக மராட்டியத்தின் ஜெயூரி எனும் ஊர் காணப்படுகின்றது.   

சொற்பிறப்பியல்

கண்டோபாவின் ஆயுதமான வாளின் இன்னொரு பெயரான கட்கம், தந்தையை வடநாட்டில் அழைக்கும் "பா" ஆகிய சொற்கள் இணைந்து கண்டோபா எனும் பெயர் உருவானது.  கண்டேராயர், கண்டேராவ் ஆகிய பெயர்கள் கண்டோபா மன்னர் எனும் பொருளைக் கொண்டவை.


சங்கதத்தில் கண்டோபாவைக் குறிக்கப் பயன்படுத்தும் மார்த்தாண்ட வைரவர் எனும் பெயரானது மார்த்தாண்ட சூரியன், வைரவர் ஆகிய இரு தெய்வங்களின் பெயர்கள் இணைந்து உருவான பெயர். மல்லரி எனும் பெயர், மல்லனை அழித்தவர் எனும் பொருளைக் கொண்டது.[2] 

தெலங்கானாவின் நாட்டார் தெய்வமான மல்லண்ணாவுடனும், ஆந்திரத்தின் மல்லிகார்ச்சுனருடனும் சிலநேரங்களில் கண்டோபாவை இணைத்து நோக்குவதுண்டு. ஜெயூரிகவாணி, மகாலசாகாந்தன் (மகாலசையின் கணவன்) ஆகிய பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார்.[3]

உருவவியல்

மணிமல்லர்களைக் கொல்லும் கண்டொபாவும் மாலசையும், 1880களில் வரையப்பட்ட ஓர் ஓவியம்.

கண்டோபாவின் வழக்கமான ஓவியமொன்றில், அவரது வெண்குதிரையின் முன்புறம், அவர் மனைவி மாலசை அமர்ந்து ஒரு அசுரனின் மார்பை வேலால் துளைப்பதாகச் சித்தரிக்கபப்டுகிறார்.[4] அப்போது ஒரு நாய் அந்த அசுரனின் தொடையைக் கடிக்க, குதிரை அவன் தலையைத் தாக்குகிறது. இன்னொரு அசுரன், குதிரையை தன் கதையால் தாக்க முயலும் போது, கண்டோபா வாளுடன் அவன் மீது பாய முயல்கிறார். இன்னும் சில சித்தரிப்புகளில் கண்டோபா குதிரை மீது வீற்றிருக்க, அக்குதிரை  அசுரர்களின் தலைகளை குளம்புகளால் மிதிப்பது போல் காட்சியளிக்கும். [5]

திருவுருவச் சிலைகளைப் பொறுத்தவரை, உடுக்கை, திரிசூலம், வாள், பண்டாரப் பத்திரம் (மஞ்சட்தூள் நிரம்பிய பாத்திரம்) தாங்கியவராக கண்டோபா சித்தரிக்கப்படுவார். அவரது ஆடையணி மராட்டிய சர்தார்,[6] போல அல்லது ஒரு இஸ்லாமிய பட்டாணி போல காணப்படும்.  இன்னும் சில சிற்பங்களில் அவரது ஒன்று அல்லது பல தேவியருடனும், நாய்களுடனும் அவர் காட்சியளிப்பார்.[7] சில இடங்களில்  அம்மன் சிவலிங்கமும் அவரது அடையாளமாகக் காணப்படுகிறது .[8] பெரும்பாலான கண்டோபா ஆலயங்களில் சிவலிங்கம் மற்றும் குதிரையில் அமர்ந்த வடிவம் ஆகிய இரு தோற்றங்களிலும் கண்டோபாக்கு வழிபாடு இடம்பெறுகின்றது..

தொன்மங்கள்

பிரம்மாண்ட புராணத்தின் கக்‌ஷேத்ர காண்டத்தின் ஒரு பகுதியாகச் சொல்லப்படும் மல்லாரி மான்மியம், கண்டோபாவின் கதையை விவரிக்கின்றது. (இன்றுள்ள பிரம்மாண்ட புராணப் பதிப்புகளில் மல்லாரி மான்மியத்தைக் காணக்கூடவில்லை).[9] சில ஆய்வாளர்கள், இம்மான்மியம் 1460-1510 இடையே இயற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்கின்றனர். .[10] சித்தபல் கேசஸ்ரீயால் 1585இல் எழுதப்பட்ட இதன் மராத்திய வடிவமொன்றும் கிடைக்கிறது.[11] கங்காதரரால் 1821இல் எழுதப்பட்ட ஜயாத்திரி மான்மியம், மார்த்தாண்ட விஜயம் என்பனவும், வேறு வாய்மொழி இலக்கியங்களும் கண்டோபா பற்றிய தொன்மங்களாக அமைகின்றன. [12][13]

கண்டோபாவின் ஜெயூரி ஆலயத்தில் சிவப்பு நிறத்தில் மணி அசுரனின் பிரதிமை வழிபடப்படுகிறது

பிரமனிடம் பல வரங்கள் பெற்று வெல்லமுடியாதோராகத் திகழ்ந்த அசுரர்கள் மல்லன், அவன் தம்பி மணி ஆகியோரின் தொல்லை தாங்காமல், ஏழுமுனிவர்கள் இந்திரன், திருமால் சகிதம் ஈசனிடம் முறையிடுகிறார்கள். மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு ஹரித்ரன் என்ற பெயரில் மார்த்தாண்ட வைரவராக  சிவன் நந்தி மீது எழுந்தருளுகிறார். மணியும் மல்லனும் மார்த்தாண்ட வைரவரால் கொல்லப்படும் போது, தன் வெண்பரியை அவருக்குப் பரிசளிக்கும் மணி, அவரது எல்லா ஆலயங்களிலும் கோயில் கொள்ளும் வரத்தையும் பெறுகிறான். அவனுக்கு அடியவர்கள் ஆட்டிறைச்சி படைத்ஹ்டு வழிபடுகிறார்கள். மல்லனுக்கு கண்டோபா வரமளிக்க முற்பட்ட போது, அவன் நரமாமிசமும் உலகின் அழிவும் விழைந்ததாகவும், சீற்றமுற்ற கண்டோபா அவன் தலையரிந்ததாகவும், பக்தர்களின் கால்களால்  அவன் இன்றும் மிதிக்கபப்டுவதாகவும் நம்பப்படுகிறது. தொன்மங்களின் படி, மணிமல்லர்களின் அழிவு பிரேம்புரி எனும் தலத்தில் நிகழ்ந்தது.[14][15]

கண்டோபாவின் தேவியர் மாலசை, பானாய் ஆகிய இருவரும் சிவனின் தேவியரான பார்வதியும் கங்கையும் எனப்படுகிறது. மாலசையின் சகோதரரும் கண்டோபாவின் அமைச்சருமான கேகடி பிரதானன் திருமாலின் அம்சம்.[16], அசுரரைக் கொல்ல கண்டோபாக்கு உதவிய நாய், கண்ணனின் அம்சம். வெண்பரி நந்தியின் அம்சம். மணியும் மல்லனும் மது கைடபரின் மறுபிறவிகள் என்று கண்டோபா பற்றிய தொன்மங்கள் மேல்நிலையாக்கப்படுகின்றன.[17] சில மரபுரைகளில் மணியும் மல்லனும் மணிமல்லன் என்ற ஒரே அசுரன். சில மரபுரைகளில் மாலசை அல்லது பானு எனும் கண்டோபாவின் தேவியும்,  நாயும், மணியின் குருதியைச் சேகரித்து, அவனை அழிக்க உதவுகிறார்கள்..[18]

தேவியர்

மாலசை பானுவுடன் அருளும் கண்டோபா

கண்டோபாவின் தேவியர், அவரை பல்வேறு சமூகங்கள் உரிமை கோர அடிப்படையாக அமைகின்றனர். கண்டோபாவின் முதன்மையான தேவியான மாலசை அல்லது மஹாலஸா, வாணி அல்லது இலிங்காயத வாணிக குலத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டாவது தேவி பானு, தங்கர் எனும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர். மாலசையின் திருமணம், கற்புமணமாகவும், பானுவின் திருமணம் களவுமணமாகவும் சித்தரிக்கப்படுகிறது. பார்வதி அல்லது மோகினியின் அம்சமாக, தீர்மர்சேத் என்பாருக்கு மகளாகப் பிறந்த மாலசை, தைப்பூசமன்று, பலி (பெம்பர்) எனும் தலத்தில் கண்டோபாவை கரம்பிடிக்கிறாள். பானு இந்திரனுக்கு மகளாகப் பிறந்து பூவுலகில் கைவிடப்படுகிறாள். அவளை தங்கர் குல மாது ஒருத்தி எடுத்து வளர்க்கிறாள். மாலசையிடம் சூதாட்டமொன்றில் தோற்று பன்னீராண்டுகள் அஞ்ஞாதவாசம் புரிய ஒத்துக்கொள்ளும் கண்டோபா, பானுவின் வளர்ப்புத்தந்தையிடம் வேலைக்கமர்ந்து அவள் மீது காதல் கொண்டு அவளை அடைகிறார்.   தமிழ் நாட்டார் வழக்கில் வள்ளி - தெய்வானை இடையேயான மோதல்களை இவர்களிடமும் காணலாம்.  தன் தேவியரிடையேயான மோதலைத் தவிர்க்க, ஜெயூரியின் மேற்புறம் மாலசையையும், கீழ்ப்புறம் பானுவையும் குடியமர்த்துகிறார் கண்டோபா. மூத்தவள் மாலசை நல்ல சமையல் காரி, ஆனால் பொறாமை பிடித்தவள். பானுவோ பேரழகி. கவர்ச்சியானவள். ஆனால் அவளுக்கு சமைக்கத் தெரியாது.  தத்துவார்த்தபூர்வமாக மாலசையையும் பானுவையும் பண்பாடு மற்றும் இயற்கைக்கு முறையே ஒப்பிடுகிறார்கள். [19]


கண்டோபாவின் மூன்றாவது தேவியான ராம்பாய் சிம்பின், ஒரு தேவலோக அரம்பையின் அம்சமாக பூவுலகில் பிறந்த நெசவாளர் குலப்பெண். அவளை வேட்டையாடச் செல்லும் போது, ஜெயூரியின் அருகே உள்ள பெல்சாரே எனும் கிராமத்தில் கண்டு மணம் புரிகிறார் கண்டோபா.  நான்காமவளான புலாய் மாலின், மாலி எனும் தோட்டக்காரர் குலத்தவள். ஐந்தாமவலான சண்டாய் பகவின், எண்ணெய் வாணிக சமூகத்தவள். அவளை இஸ்லாமியர் ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள்.இவர்கள் எல்லோரையும் தவிர, கண்டோபாவுக்கு அர்ப்பணிக்கப்படும் தேவதாசியரான முரளிகள், அவரது தேவியராகவே கருதப்படுகின்றனர். .[20][21]

மற்ற தொடர்புகள் மற்றும் அடையாளங்கள்

ஒரு ஓவியம் சித்தரிக்கிறது Khandoba சவாரி ஒரு வெள்ளை குதிரை Mhalsa சேர்ந்து, ஒரு நாய் மற்றும் பணியாளர்கள் உட்பட ஒரு Waghya நடனம் அவருக்கு முன்.

வழிபாடு

Khandoba உள்ள ஒரு வீட்டு கோவில் (devghar) ஒரு Deshastha பிராமண குடும்பம்

சிவவழிபாட்டுக்குச் சமனாக, அவரது அம்சங்களை, குறிப்பாக கண்டோபாவை வழிபடும் வழக்கம், தக்காணப்பகுதியில் மிகப்பிரபலமாகக் காணப்படுகிறது. கண்டோபா கோரியதை அருளும் கருணைத்தெய்வமாக போற்றப்படுகிறார்.[22] [23]

சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள்

ஒழுங்காகப் பூசிக்கப்படாவிட்டால் கண்டோபா சீற்றம் கொள்வார்.[24]  மஞ்சள் தூள் (பண்டாரம்), பெல் பழங்கள், இலைகள், வெங்காயம் மற்றும் பிற காய்கறிகள் என்பன அவர் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. .[25] கண்டோபாவுக்கு ஆலயத்துக்கு வெளியே ஆட்டிறைச்சி படைத்து வணங்குவது வழக்கமாகும்.

நவாஸ் எனும் நேர்ச்சைகள், கண்டோபா வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவை. தீமிதித்தல், அலகு குத்துதல் என்பன வற்றுள் கூறிப்பிடத்தக்கவை.[26]   .[27]

ஒரு Vaghya, பார்ட் of Khandoba

வாக்யா (புலி) என்ற பெயரில் இளைஞர்களையும், முரளி என்ற பெயரில் யுவதிகளையும் கண்டோபாவுக்கு அர்ப்பணிப்பது பண்டைய வழக்கம். இன்று முரளிகளை அவ்வாறு ஒப்படைப்பதில்லை. வாக்யாக்கள் தங்களை கண்டோபாவின் நாய்க்குச் சமனாகக் கருதிக்கொள்கிறார்கள். 

முஸ்லீம் பூஜை

கண்டோபாவை மல்லு அல்லது அஜ்மத்கான் என்று அழைக்கும் முஸ்லீம்கள், அவரை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஜெயூரியில் கண்டோபாவின் குதிரைகளைப் பராமரிப்போராக முஸ்லீம்களே இருந்து வருகின்றனர்.  

கோயில்கள்

Khandoba தான் புதிய கோயில் Jejuri. அறிவிப்பு பக்தர்கள் பொழிவது மஞ்சள் தூள் (bhandara) ஒருவருக்கொருவர்.
Khandoba அவரது மனைவிகள் மணிக்கு Mailar Mallanna கோயில், க்ஹானாபூர் அருகே பீதர், கர்நாடகா.

தக்காணத்தில் 600 க்கும் மேற்பட்ட கண்டோபாவின் உள்ளன. அவற்றுள் பதினொரு ஆலயங்கள் ஜாக்ரத் ஷேத்ரங்கள் என்ற பெயரில்  முக்கிய வழிபாட்டு மையங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஆறு மராட்டியத்திலும் ஐந்து வடகன்னடத்திலும் உள்ளன.. 

  1. Jejuri: முதலாக மையம் வழிபாடு Khandoba.[28] அது அமைந்துள்ளது 48 கி. மீ இருந்து புனே, மகாராஷ்டிரா. உள்ளன இரண்டு கோயில்கள்: முதல் ஒரு பண்டைய கோவில் என அழைக்கப்படும் Kadepathar. Kadepathar கடினம் ஏற. இரண்டாவது ஒரு புதிய மற்றும் மிகவும் பிரபலமான காத்-கோட் கோயில், இது எளிதாக ஏற. இந்த கோவில் சுமார் 450 படிகள், 18 கமனி (arches) மற்றும் 350 Dipmalas (விளக்கு தூண்கள்). இரு கோயில்கள் உள்ளன கோட்டை போன்ற கட்டமைப்புகள்.[29]
  2. பாலி (ராஜபூர்) அல்லது பாலி-Pember, மேட்டுப்பாளையம் மாவட்டம், மஹாராஷ்டிரா.[30]
  3. ஆதி-mailar அல்லது க்ஹானாபூர் (Pember அல்லது Mailkarpur) அருகே பீதர், கர்நாடகா
  4. Naldurg, ஒஸ்மானபாத் மாவட்டம், மஹாராஷ்டிரா.
  5. Mailara லிங்கம், தார்வாட் மாவட்டம், கர்நாடகா.
  6. Mangasuli, ஆலப்புழா மாவட்டம், கர்நாடகா.
  7. Maltesh அல்லது Mailara கோவில் Devaragudda, ரானிபென்னுர் தாலுகா, Haveri மாவட்டம், கர்நாடகா.
  8. Mannamailar அல்லது Mailar, பெல்லாரி, கர்நாடகா.
  9. Nimgaon Dawadi, புனே மாவட்டம், மஹாராஷ்டிரா.[31]
  10. Shegud, அகமது நகர் மாவட்டம், மஹாராஷ்டிரா.
  11. Komuravelli, Siddipet மாவட்டம், தெலங்கானா.
  12. Satare, அவுரங்காபாத் மாவட்டத்தில், மஹாராஷ்டிரா.
  13. Mailaralingeshwar கோவில் Mailapur, Yadgir மாவட்டம், கர்நாடகா.

என ஒன்றுக்கு R. C. Dhere, இரண்டு கல் கல்வெட்டுகளில் உள்ள 1063 C. E. மற்றும் 1148 C. E சொல்லி நாட்டுப்புற தெய்வங்கள் Mailara மற்றும் அவரது துணைவியார் Malavva என்று கூறுகிறது Mailara புகழ் பெற்றது கர்நாடகா இந்த காலத்தில். விரைவில், ராயல்ஸ் இந்த பகுதியில் தொடங்கியது நிமிர்த்தும் கோயில்கள் இந்த நாட்டுப்புற தெய்வம், பயத்தை உயரடுக்கு வர்க்கம் நிறுவப்பட்டது மதம் யார் vilified Mailara. ஆரம்பத்தில் exaulted மூலம் ஒரு அவதாரம் சிவன், Mailara இருந்தது denouned மூலம் Basava, நிறுவனர் சிவா-வணங்கி Lingayat பிரிவை யார் - என்றும் பின்னர் ஊக்குவிக்க தெய்வம். Chakradhar சுவாமி (சி.1270, நிறுவனர் Mahanubhava பிரிவை), Vidyaranyaswami, ஷேக் முஹம்மது விமர்சித்தார் கடவுள்.[32] , Varkari கவிஞர்-saint ஏக்நாத் எழுதிய "disparagingly" பற்றி Khandoba வழிபாட்டு வழிபாடு, ஆனால் அவரை பின்னர், "திறந்த" விமர்சனம் Khandoba நிறுத்தி, ஆனால் "காட்டுமிராண்டி" நடைமுறைகள் அவரது வழிபாட்டு இன்னும் இருந்தன இலக்கு.

குறிப்புகள்

  1. Singh p.ix
  2. Sontheimer in Hiltebeitel p.314
  3. Sontheimer in Feldhaus p.115
  4. Stanley in Hiltebeitel p.284
  5. Stanley in Hiltebeitel p.288
  6. Sontheimer in Hiltebeitel p.303
  7. Stanley (Nov. 1977) p. 32
  8. For worship of Khandoba in the form of a lingam and possible identification with Shiva based on that, see: Mate, p. 176.
  9. Sontheimer in Bakker p.103
  10. Sontheimer in Bakker pp.105-6
  11. Sontheimer in Bakker p.105
  12. Sontheimer in Hiltebeitel p.330
  13. Stanley in Hiltebeitel pp. 272,293
  14. Stanley in Hiltebeitel pp.272-77
  15. For a detailed synopsis of Malhari Mahtmya, see Sontheimer in Bakker pp.116-26
  16. Sontheimer in Hiltebeitel p.328
  17. Stanley in Hiltebeitel p.278
  18. Stanley in Hiltebeitel pp.280-4
  19. Sontheimer in Feldhaus p.117-8
  20. Sontheimer in Feldhaus p. 118
  21. Stanley (Nov. 1977) p. 33
  22. Stanley (Nov. 1977) p. 31
  23. Sontheimer in Bakker p.104
  24. Sontheimer in Hiltebeitel pp.332-3
  25. Underhill p.111
  26. Stanley in Hiltebeitel p.293
  27. Sontheimer in Hiltebeitel p.313
  28. For Jejuri as the foremost center of worship see: Mate, p. 162.
  29. "Jejuri". Maharashtra Gazetteer. 2006.
  30. "PAL OR RAJAPUR". Satara District Gazzeteer. Archived from the original on 18 April 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
  31. Nimgaon
  32. Dhere, R. C. (2009). "FOLK GOD OF THE SOUTH: KHANDOBA - Chapter 1: "Mailar', that is Khandoba". official site of R C Dhere. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டோபா&oldid=2509233" இலிருந்து மீள்விக்கப்பட்டது