பேகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:


===பிறர் பாடியவை===
===பிறர் பாடியவை===
* பேகன் ஆண்ட நாடு "பெருங்கல் நாடு" எனப் போற்றப்பட்டது. பேகன் ஆவியர் குடிப் பெருமகன். மழை பொழிந்த மலையில் ஆடிய மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டவன். இவனுக்குப் பின் ஓய்மான் நாட்டில் நல்லியக்கோடன் வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறார் [[இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]]. <ref> <poem> வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
* பேகன் ஆண்ட நாடு "பெருங்கல் நாடு" எனப் போற்றப்பட்டது. பேகன் ஆவியர் குடிப் பெருமகன். மழை பொழிந்த மலையில் ஆடிய மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டவன். இவனுக்குப் பின் ஓய்மான் நாட்டில் நல்லியக்கோடன் வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறார் [[இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்]]. <ref> <poem> வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,

19:23, 3 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்

பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர். பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

இவனைப் பற்றிய பாடல்கள்

பரணர் பாடியவை

  • கொடைவள்ளல் பேகன் கொண்டல் மலை [1] இது நீரூற்று மிக்க சோலைகளை உடையது. ஈக்கள் மொய்க்கும் தேன் கூடுகள் கொண்டது. தலைவி வாயிலிருந்து வரும் சொற்கள் பேகன் மலை தேன் போல இனித்ததாம். [2]

பிறர் பாடியவை

  • பேகன் ஆண்ட நாடு "பெருங்கல் நாடு" எனப் போற்றப்பட்டது. பேகன் ஆவியர் குடிப் பெருமகன். மழை பொழிந்த மலையில் ஆடிய மயிலுக்குத் தன் ஆடையைப் போர்த்திவிட்டவன். இவனுக்குப் பின் ஓய்மான் நாட்டில் நல்லியக்கோடன் வள்ளலாகத் திகழ்ந்தான் என்கிறார் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். [3]

மேற்கோள்

  1. கிழக்கில் இருக்கும் பழநி (பொதினி) மலை கொண்டல் மலை. இதன் மேற்கில் இருப்பது கோடை மலை (கோடைக்கானல், கொடைக்கானல்)
  2.  அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
    நுண் பல் துவலை புதல்மிசை நனைக்கும் 15
    வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
    கொண்டல் மா மலை நாறி,
    அம் தீம் கிளவி வந்தமாறே. (அகநானூறு 262)

  3.  வானம் வாய்த்த வள மலைக் கவா அன்
    கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய 85
    அருந் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
    பெருங் கல் நாடன், பேகனும்; (சிறுபாணாற்றுப்படை)

வெளிப்பார்வை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகன்&oldid=2506400" இலிருந்து மீள்விக்கப்பட்டது