தருமபுரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →வரலாறு |
|||
வரிசை 32: | வரிசை 32: | ||
==புவியமைப்பு== |
==புவியமைப்பு== |
||
வடக்கில் [[ |
வடக்கில் [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டமும்]], கிழக்கில் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]], [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டங்களும்]], தெற்கில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டமும்]], மேற்கில் [[கருநாடகம்|கருநாடக மாநிலத்தின்]] [[சாமராசநகர் மாவட்டம்|சாமராசநகர் மாவட்டமும்]] இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. |
||
===காலநிலை=== |
===காலநிலை=== |
11:52, 16 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்
- இக்கட்டுரை தருமபுரி மாவட்டத்தைப் பற்றியது. தருமபுரி நகரைப் பற்றி அறிய, தருமபுரி பக்கத்தைக் காணவும்.
தருமபுரி மாவட்டம் | |
தருமபுரி மாவட்டம்:அமைந்த இடம் | |
தலைநகரம் | தருமபுரி |
மிகப்பெரிய நகரம் | தருமபுரி |
ஆட்சியர் |
திரு.கே.விவேகானந்தன் இ.ஆ.ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு.அச்ரா கார்க் இ.கா.ப. |
ஆக்கப்பட்ட நாள் | 02.10.1965 |
பரப்பளவு | 4497.77 கி.மீ² (12வது) |
மக்கள் தொகை (2011 வருடம் அடர்த்தி |
1,506,843 (வது) /கி.மீ² |
வட்டங்கள் | ஐந்து |
ஊராட்சி ஒன்றியங்கள் | எட்டு |
நகராட்சிகள் | ஒன்று |
பேரூராட்சிகள் | பத்து |
ஊராட்சிகள் | |
வருவாய் கோட்டங்கள் | இரண்டு |
தருமபுரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஒன்றாகும். தருமபுரி நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
வரலாறு
1965-ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.
சங்ககால தகடூரை (தற்போதைய தருமபுரி) ஆண்டவர்களுள் மிகவும் அறியப்படுபவர் அதியமான் நெடுமான் அஞ்சி. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து,சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.
புவியமைப்பு
வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கருநாடக மாநிலத்தின் சாமராசநகர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
காலநிலை
பருவநிலை பொதுவாக வெப்பமயமானதாகும். ஆண்டிற்கு சராசரியாக 89.556 மி.மீ. மழை பொழிகின்றது.
கல்வி
கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தருமபுரி மாவட்டம் கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்தி, அரசுக்குத் தெரியாமல் அங்குள்ள மக்களுக்கு சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையான மருந்துகளைக் கொடுத்து ஆய்வு நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.[1]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 15,06,843 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தருமபுரி மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[3] விட குறைவானது. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
நிருவாகம்
தொகுதி | வேட்பாளர் | கட்சி |
---|
தருமபுரி மாவட்டதில் மொத்தம் ஐந்து சட்டமன்ற தொகுதிகள், இரண்டு வருவாய் கோட்டங்கள், ஐந்து வட்டங்கள், ஒரு நகராட்சி, எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பத்து பேரூராட்சிகள் உள்ளன.
வருவாய் கோட்டங்கள்
- தருமபுரி
- அரூர்
வட்டங்கள்
நகராட்சி
- தருமபுரி
ஊராட்சி ஒன்றியங்கள்
பேரூராட்சிகள்
- அரூர்
- கடத்தூர்
- காரிமங்கலம்
- மாரண்டஅள்ளி
- பாலக்கோடு
- பாப்பாரப்பட்டி
- பாப்பிரெட்டிப்பட்டி
- பென்னாகரம்
- பி. மல்லாபுரம்
- கம்பைநல்லூர்
பொருளாதாரம்
விவசாயம் மாவட்டத்தின் முக்கியமான தொழிலாக விளங்குகின்றது. சுமார் 70 சதவிகித மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளுள் ஒன்றாகும்.
சுற்றுலா
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ந்து வரும் தொழிலாகும். தமிழ்நாட்டின் தலையாய நதியான காவிரி, ஒகேனக்கல் அருவியின் வழியாகவே மாநிலத்தை வந்தடைகிறது. இங்கு பரிசல் பயணமும் எண்ணைக்குளியலும் பிரபலம்.
தீர்த்தமலை மலைக்கோவில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள வாணியாறு அணை மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ தினமணி; 02.12.2014; பக்கம் 6; (கட்டுரை:ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...)
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு,2011 - தர்மபுரி மாவட்டம்". பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2014.
- ↑ "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2014.