வரதட்சணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 27.107.112.159ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 11: வரிசை 11:
}}</ref>
}}</ref>



"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.
==இந்திய அரசின் சட்டங்கள்==
==இந்திய அரசின் சட்டங்கள்==



14:09, 10 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமை

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

வரதட்சணை சாவுகள்

2012க்கான தேசிய குற்றப் பதிவு அமைப்பின் தகவல் படி, இந்தியாவில் 8233 வரதட்சணை சாவுகள் நடந்திருக்கின்றன. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணை காரணமாக மரணமடைகிறாள். ஆனால், பதிவு செய்யப்படும் வழக்குகளில் 32 குற்றவாளிகளே தண்டனை பெறுகின்றனர். குடும்ப வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. 2012ல் 1,06,527 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு 292 அல்லது ஒரு மணி நேரத் துக்கு 12 அல்லது 5 நிமிடத்துக்கு ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். குடும்ப வன்முறை வழக்குகளில் 15சதவீதம் பேரே தண்டனை பெறுகின்றனர். தமிழகத்தில் 2012ல் 110 வரதட்சணை சாவுகள், 1965 குடும்ப வன் முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1]


"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.

இந்திய அரசின் சட்டங்கள்

வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை:

  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961ல், சில திருத்தங்கள் 1984 மற்றும் 1986ல் செய்யப்பட்டன. மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் 1983ல் 498 ஏ என்ற பிரிவு இணைக்கப் பட்டு, கணவனும், அவனது உறவினர்களும் மனைவியை உடல் ரீதியாக அல்லது மனரீதியாகக் கொடுமைப் படுத்தினால், 3 ஆண்டுகள் வரை சிறை தண் டனை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக மன ரீதியான சித்ரவதை என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு 1986ல், 304 பி என்ற பிரிவு வரதட்ச ணை சாவு குறித்துக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான சூழலில் இறந்தால், இறப்பதற்கு முற்பட்ட காலத்தில் வரதட்சணை கொடுமைகள் நடந்திருந்தால், அது வரதட்சணை மரணம் என்று தான் பதிவு செய்யப்படும். கொடுமை செய்த கணவனும், அவர் உறவினர்களும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றச்சாட்டு உண்மையல்ல என்று குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தான் நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூ பிக்கப்பட்டால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண் டனை வரை கிடைக்கும். அறிவியல் விரோத மாக ஸ்டவ் வெடித்து மருமகள் மட்டும் சாகிற பிரச்னைக்கு இவ்வாறாக முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மரண வாக்குமூலத்துக்கு மாஜிஸ் திரேட் வர வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவரே போதும் என்ற விதி அறிமுகப் படுத்தப்பட்டது. 2005ல் வந்த குடும்ப வன்முறை தடுப்புச் சட்டமும் வரதட்சணையைக் குற்றமாக்குகிறது.1961 சட்டத்தில் திருமணத்துக்காக கொடுக்கப்படுவதே வரதட்சணை என்று இருந்தது, 1984ல் திருமணம் தொடர்பாக என்று மாற்றப்பட்டது.[1]

மகளிர் காவல் நிலையங்கள்

தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "வரதட்சணை வெறுப்போம்! மனிதர்களாய் நடப்போம்!". தீக்கதிர். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2013.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

யாழ்ப்பாணத்துச் சீதன முறை

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதட்சணை&oldid=2398987" இலிருந்து மீள்விக்கப்பட்டது