திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமணர்களின் அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது.
திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமணர்களின் அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது.
==பார்சுவநாதர் கோவில்==
==பார்சுவநாதர் கோவில்==


வரிசை 12: வரிசை 12:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
#நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
#நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com

[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

01:36, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

திருநருங்கொண்டை, உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூரின் குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமணர்களின் அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது.

பார்சுவநாதர் கோவில்

மலையின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக இரு பாறைகளுக்கு நடுவில் அப்பாண்டைநாதர் திருவுருவம் புடைப்புச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.

சந்திர பிரபர் கோவில்

கி.பி 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், சந்திரபிரபர் திருவுருவம் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் இம்மண்டபம் கீழைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.

மேலும் மண்டபத்தின் உள் பகுதியில், தீர்த்தங்கரர் திருவுருவச்சிலைகளூம், தர்மதேவி, பிரம்மதேவர் சிலைகளூம் காணப்படுகின்றன. ஜிநவாணி மற்றும் பத்மாவதி அம்மனுக்கு தனி கோவில்கள் உள்ளன.

கல்வெட்டுகள்

கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன்,  இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

சமண படுகைகள்

இக்கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்க்ப்பட்டுள்ளன. இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com