இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
==== 1. முதல் எழுத்து ====
==== 1. முதல் எழுத்து ====
முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும் .உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.
முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும் .உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

'''உயிர் எழுத்துக்கள்'''
'''உயிர் எழுத்துக்கள்'''

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.

'''மெய் எழுத்துக்கள்'''
'''மெய் எழுத்துக்கள்'''

மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.
மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.



07:34, 18 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

இலக்கணம் மொழியின் அமைப்பையும் பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.

இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். இந்த சொல் பாளி மொழியின் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாகவும் கூறுவர்.[சான்று தேவை] சமற்கிருதத்தில் இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.

தமிழ் இலக்கணம்

முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக "தமிழ் இலக்கணம்" என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,


எழுத்து இலக்கணம்

எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்று இலக்கணத் திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது . எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகிறது . 'எழுத்து என படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '[1] ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும் . மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.

எழுத்து இலக்கண வகைகள்

எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,

1. முதல் எழுத்து

2. சார்பு எழுத்து

1. முதல் எழுத்து

முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும் .உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.

மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.

2. சார்பு எழுத்து

தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றை சார்பு எழுத்துக்கள் என்று கூறுவார் . இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றிய லிகரம் 7) ஐ காரக் குறுக்கம் 8) ஒளகாரக் குறுக்கம் 9) மகரக் குறுக்கம் 10) ஆய்தக் குறுக்கம் என 10 வகையாக பிரித்து கூறுவர்.

 1.உயிர்மெய் எழுத்துக்கள் 

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 உடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 *18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. (உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா க் + இ = கி க்+ஈ = கீ க் + உ = கு)

2. ஆய்தம் (தனி நிலை எழுத்து )

தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் ( ஃ ) தமிழில் உண்டு இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்கு பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாக கொண்டு வரும். ( உதாரணம் : அஃது, இஃது, எஃது )



  1. சொல்
  2. பொருள்
  3. யாப்பு
  4. அணி

மேலும் காண்க

  1. 1. தொல்காப்பியம் முதல் நூற்பா
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணம்_(மொழியியல்)&oldid=2306917" இலிருந்து மீள்விக்கப்பட்டது