இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய அமைதிப் படை
வரிசை 73: வரிசை 73:
[[பகுப்பு:இந்தியப் படைத்துறை நடவடிக்கைகள்]]
[[பகுப்பு:இந்தியப் படைத்துறை நடவடிக்கைகள்]]
[[பகுப்பு:ஈழப்போரில் வெளிநாடுகளின் பங்கு]]
[[பகுப்பு:ஈழப்போரில் வெளிநாடுகளின் பங்கு]]
[[பகுப்பு:இந்திய அமைதிப் படை]]

11:04, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

இந்திய அமைதி காக்கும் படை
Indian Peace Keeping Force
செயற் காலம்யூலை 1987 – மார்ச் 1990
நாடுஇலங்கை
பற்றிணைப்புஇந்தியா இந்தியா
கிளைஇந்திய இராணுவம்
இந்திய கடற்படை
இந்திய வான்படை
பொறுப்புஅமைதி காத்தல்
புரட்சி எதிர்ப்பு
விஷேட நடவடிக்கைகள்
அளவு100,000 (உச்சம்)
சண்டைகள்பவான் நடவடிக்கை
வீராட் நடவடிக்கை
திரிசூல் நடவடிக்கை
செக்மேட் நடவடிக்கை
பதக்கம்1 பரம வீர சக்கரம்
6 மகா வீர சக்கரம்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
திபந்தர் சிங்
ஹர்கிராட் சிங்
எஸ். சி. சர்தேஸ்பாண்டே
ஏ. ஆர். கல்கட்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலை இறப்புகள்

ராஜீவ் காந்தி கொலை

ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.

இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[2] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[3]

இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை

பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள்

எண் காலமும் இடமும் கொலைகள் பற்றிய தகவல்கள்
1 14 ஆகத்து 1989, வல்வெட்டித்துறை குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2 21 அக்டோபர் 1987, யாழ்பாண மருத்துவமனை தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)
3. 9 நவம்பர் 1987 இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
4. ஆகத்து 2-3, 1989 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.
5. மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.

விமர்சனங்கள்

  • இப்படை மேல் இலங்கையில் இருந்த மூன்று ஆண்டுகளின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடும் சாக்கில் ஈழத்துப் பெண்களை கற்பழித்தும், வன்கொடுமைக்கு உட்படுத்தியும், பாலியல் சித்தரவதைகள் செய்தும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உண்டு.[4]

மூலம்

  • "Details of Indian IPKF war crimes/genocide". eurasiareview.com. 24 March, 2013. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புக்கள்

உசாத்துணைகள்

  1. ராஜீவ் காந்தி கொலை பிபிசி அணுகப்பட்டது நவம்பர் 25(ஆங்கில மொழியில்)
  2. ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம் அணுகப்பட்டது நவம்பர் 25, 2006 (ஆங்கில மொழியில்)
  3. பிரபாகரன் செவ்விகள்[1]. Interview with தமிழோசை குழுவினர். பிரபாகரன் செவ்விகள்[2]. Retrieved on 18 அக்டோபர் 2014.
  4. Elizabeth Porter, Anuradha Mundkur (2012). [Peace and Security: Implications for Women/http://books.google.co.in/books?id=GRDPOVPAlR8C&pg=PT193&dq=Indian+Peace+Keeping+Force+Rapes+srilankan+women&hl=en&sa=X&ei=UX4SUtyNDI6FrAf6mYH4BQ&ved=0CDsQ6AEwAg#v=onepage&q=Indian%20Peace%20Keeping%20Force%20Rapes%20srilankan%20women&f=false]. Univ. of Queensland Press.