ஐதராபாத் நிசாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய முஸ்லிம்கள்
வரிசை 33: வரிசை 33:
*[http://www.4dw.net/royalark/India/hyder.htm Detailed genealogy of the Nizams of Hyderabad]
*[http://www.4dw.net/royalark/India/hyder.htm Detailed genealogy of the Nizams of Hyderabad]
*[http://www.youtube.com/watch?v=aBrnCbBZKqI Rare colour footage of accession ceremony of the 8th Nizam of Hyderabad in 1967 (Youtube)]
*[http://www.youtube.com/watch?v=aBrnCbBZKqI Rare colour footage of accession ceremony of the 8th Nizam of Hyderabad in 1967 (Youtube)]



[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
வரிசை 40: வரிசை 39:
[[பகுப்பு:தெலுங்கானா வரலாறு]]
[[பகுப்பு:தெலுங்கானா வரலாறு]]
[[பகுப்பு:இந்தியாவின் மன்னராட்சிகள்]]
[[பகுப்பு:இந்தியாவின் மன்னராட்சிகள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]

11:03, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

நிசாம்-உல்-முல்க்
Nizam-ul-Mulk of ஐதராபாத்
முன்னாள் மன்னராட்சி
மரபுச் சின்னங்கள்
படிமம்:Mir osman ali khan.JPG
ஓசுமான் அலி கான்
முதல் மன்னர் கமார்-உத்-தின் கான், அசாப் சா
கடைசி மன்னர் ஓசுமான் அலி கான், அசாப் சா VII
அலுவல் வசிப்பிடம் சௌமகல்லா அரண்மனை
மன்னராட்சி துவங்கியது 31 சூலை 1720
மன்னராட்சி முடிவுற்றது 17 செப்டம்பர் 1948

ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் (Nizam-ul-Mulk of Hyderabad, தெலுங்கு: నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్; உருது: نظام-ال-ملک وف حیدرآباد; மராத்தி: निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद; கன்னடம்: ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್; பாரசீக மொழி: نظام-ال-ملک اف حیدرآباد‎) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் ஐதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் நிசாம்-உல்-முல்க் (உருது: نظام‌الملک) என்பதன் சுருக்கமே நிசாம் (உருது: نظام‌) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I இந்த வம்சத்தை துவங்கினார். 1707இல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் பிரித்தானிய இந்தியாவின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஐதராபாத் அரசு விளங்கியது.

இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர். செப்டம்பர் 17, 1948இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய இவர்களது ஆட்சி முடிவுற்றது.[1][2]

மேற்கோள்கள்

  1. தெலங்கானா
  2. Richest Indian in history!

மேலும் அறிய

  • Mughal Administration of Deccan Under Nizamul Mulk Asaf Jah, 1720-48 A.D.By M. A. Nayeem, Indian Council of Historical Research, University of Poona, Dept. of History [1]

"The Days of the Beloved" Harriet Ronken Lynton and Mohini Rajan, Berkeley University Press

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_நிசாம்&oldid=2227831" இலிருந்து மீள்விக்கப்பட்டது