அன்பே தெய்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category இந்திய நாடகத் திரைப்படங்கள்
வரிசை 69: வரிசை 69:
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]

15:09, 19 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

அன்பே தெய்வம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்புஆர். நாகேந்திர ராவ்
திரைக்கதைடி. யு. பதி
இசைஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, விஜய பாஸ்கர்
நடிப்புஆர். நாகேந்திர ராவ்
எம். கே. ராதா
கே. சாரங்கபாணி
ஸ்ரீரஞ்சனி ஜூனியர்
கே. எஸ். அங்கமுத்து
மற்றும் பலர்
ஒளிப்பதிவுஆர். என். கே. பிரசாத்
கலையகம்ஆர். என். ஆர். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 6, 1957 (1957-12-06)(இந்தியா) [1]
ஓட்டம்15,998 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பே தெய்வம் 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் உருவான இத் திரைப்படத்தில் ஆர். நாகேந்திர ராவ், எம். கே. ராதா, கே. சாரங்கபாணி, ஸ்ரீரஞ்சனி ஜூனியர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]

திரைக்கதை

மோகன் ராவ் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். அவரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு கணவனும், மனைவியும் அவர்களது சிறுமியான உமா என்ற மகளும் வாழ்கின்றனர். அந்தக் கணவன் ஒரு தீயவன்.
அவன் மோகன் ராவ் தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளயடிக்கத் திட்டமிடுகிறான். அவன் தனது திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஒரு மனிதனைக் கொன்றுவிடுகிறான். கணவனைக் காப்பாற்றுவதாக எண்ணி மனைவி தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொடுக்கிறாள். ஆனால் இருவரும் தண்டனை பெற்று சிறை செல்கின்றனர்.
அனாதரவான நிலையில் விடப்பட்ட சிறுமி உமாவை மோகன் ராவ் தம்பதி வளர்க்கின்றனர். உமா வளர்ந்து இளம் பெண் பருவத்தை அடைகிறாள். அவள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அந்த இளைஞன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன்.
இச்சமயத்தில் கணவனும் மனைவியும் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். தனது மகள் வசதியாக இருப்பதையும் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையும் தந்தை அறிகிறான்.
அவன் மோகன் ராவை மிரட்டிப் பணம் பறிக்க முயலுகிறான். உமாவுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. கல்யாணத்தின் போது தகப்பன் கலாட்டா செய்து திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறான்.
எவ்வாறு அவனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்து திருமணத்தை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

[2]

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பாளர் & இயக்குநர்: ஆர். நாகேந்திர ராவ்
  • கதை: ஆர். என். ஜெயகோபால்
  • வசனம்: எம். யு. பதி
  • ஒளிப்பதிவு: ஆர். என். கே. பிரசாத்
  • இசை: ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, விஜய பாஸ்கர்
  • நடன ஆசிரியர்: தங்கப்பன்
  • கலையகம்: கோல்டன்[2]
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
  • பாடல்கள்: சுந்தரக்கண்ணன்
  • நிழற்படங்கள்: ஈஸ்வர பாபு[1]

சான்றாதாரங்கள்

  1. 1.0 1.1 1.2 பிலிம் நியூஸ் ஆனந்தன் (2004) (in தமிழ்). சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails1.asp. 
  2. 2.0 2.1 2.2 கை, ராண்டார் (2 செப்டெம்பர் 2012). "Anbey Deivam 1957". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பே_தெய்வம்&oldid=2204370" இலிருந்து மீள்விக்கப்பட்டது