இராமநாதபுரம் சமஸ்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 107: வரிசை 107:
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
[[பகுப்பு:சென்னை மாகாணம்]]

14:28, 15 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

இராமநாதபுரம் சமஸ்தானம்
நிலைபிரித்தானிய இந்தியாவிற்குள் (1800–1947)
தலைநகரம்இராமநாதபுரம்
பேசப்படும் மொழிகள்தமிழ், ஆங்கிலம்
சமயம்
இந்து
மன்னர் 
முந்தையது
பின்னையது
மதுரை நாயக்கர்கள்
India


இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்
இரகுநாத கிழவன் சேதுபதி கட்டிய இராமலிங்க விலாசம்
பாஸ்கர சேதுபதி (1889–1903)
இரகுநாத கிழவன் சேதுபதி (1659-1670)

இராமநாதபுரம் சமஸ்தானம் அல்லது ராம நாடு (Ramnad Estate) என்பது, இந்தியாவின் தமிழ்நாட்டின், இராமநாதபுர மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளாகும்.

சேது என்னும் கடல் பகுதியை காக்கும் பொறுப்பில் இருந்த, மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின் சேதுபதி எனும் பட்டத்தை இட்டுக் கொள்வார்கள். சேது எனில் சேது சமுத்திரம் என்னும் கடல் பகுதி, பதி எனில் காவலர் எனப்பொருள்படும். சேது சமுத்திர பகுதியை காக்கும் சேதுபதிகளாக இலங்கை மன்னர்களும், யாதவர்களும், நாயக்கர்களும் இருந்துள்ளனர். சேதுபதிகளா இருந்த இலங்கையை சேர்ந்தவர்கள் சேதுகாவலர்கள் என்ற பெயரால் அறியப்படுகிறார்கள். இன்றளவும் இலங்கையில் சேதுகாவலர் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறர்கள். [1][2][3]

வரலாறு

மதுரை பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த இராமநாதபுரம் 1520-ஆம் ஆண்டில் விஜயநகர நாயக்க ஆட்சியின் கீழ் வந்தது. இராமநாதபுரம் நகரம் இராமநாதபுரம் சீமையின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்தது.

மதுரை நாயக்கர்கள் காலத்தில் சேதுபதிகள், மதுரை ஆட்சியின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்கர்களின் வலிமை குன்றிய பிறகு கி பி 1670இல் இரகுநாதன் என்னும் கிழவன் சேதுபதி, இராமநாதபுரத்தில் ஆட்சி செய்தார். ஆங்கிலேய ஆட்சியில் 1803இல் இராம நாடு, இராமநாதபுரம் சீமையாக மாறியது. மன்னராட்சி நாடான இராமநாதபுர சீமை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4]

பரப்பு & மக்கள் தொகை

இராமநாதபுரம் சீமையின் பரப்பளவு 2104 சதுர கிலோ மீட்டராகும். 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீமையின் மக்கள் தொகை 7,23,886 . சென்னை மாகாணத்தின் பெரும் சீமையாகும். .

வருவாய் வட்டங்கள்

இராமநாதபுரம் சீமை, இராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, திருச்சுழி மற்றும் முதுகுளத்தூர் என ஐந்து வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இச்சீமையின் முக்கிய நகரங்கள், இராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, இராமேசுவரம் ஆகும்.

சேதுபதிகள் பட்டியல்

மதுரை நாயக்கர் அரசின் படைத்தலைவர்களாக
  • சதாசிவ தேவர் சேதுபதி (1590-1621)
  • கூத்தன் சேதுபதி (1621-1637)
  • தளவாய் சேதுபதி (1637-1659)
  • இரகுநாத சேதுபதி (1659-1670)
தனி ஆட்சியாளர்களாக
  • இரகுநாத கிழவன் சேதுபதி (1670–1708)
  • முதலாம் விஜயரகுநாத சேதுபதி (1708–1723)
  • சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி (1723-1724)
  • பவானி சங்கர் சேதுபதி (1724-1728)
  • குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி (1728-1734)
  • முத்துக்குமார ரகுநாத சேதுபதி (1734-1747)
  • இராக்கத் தேவர் சேதுபதி (1747-1748)
  • இரண்டாம் விஜய ரகுநாத சேதுபதி (1748-1760)
  • முதலாம் முத்துராமலிங்க சேதுபதி (1760-1794)
பிரிட்டஷ் கம்பெனி ஆட்சியில் சுதேச சமஸ்தான மன்னர்கள்
  • மங்கலேஸ்வரி நாச்சியார் (1795-1803)
ஜமீன்தார்களாக
  • மங்கலேஸ்வரி நாச்சியார் (1803-1807)
  • அண்ணாசாமி சேதுபதி (1807-1820)
  • இராமசுவாமி சேதுபதி (1820-1830)
  • முத்து செல்லத் தேவர் சேதுபதி (1830-1846)
  • பர்வத வர்தனி அம்மாள் நாச்சியார் (1846–1862)
  • இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி (1862–1873)
  • பாஸ்கர சேதுபதி (1889–1892)
பிரித்தானியா இந்திய ஆட்சியில் 1892–1947
பிறர்

இவற்றையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. "Sethupathi Tondaimans". The History of Tamil Nadu.
  2. "Holder of History:The Ramnad Sethupathis". High Beam.
  3. "Sethupathi Dynasty of Ramnad - Guardians of Rama Sethu". Bridge of Ram.
  4. ராமநாதபுரம் வரலாறு

மேற்கோள்கள்

  • The Imperial Gazetteer of India. Clarendon Press. 1908. பக். 177–179. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதபுரம்_சமஸ்தானம்&oldid=2187471" இலிருந்து மீள்விக்கப்பட்டது