சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
added image |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Officeholder |
|||
{{தகவற்சட்டம் தலைவர்கள் |
|||
|name = ராஜாஜி |
|||
| honorific-prefix = |
|||
|image = C_Rajagopalachari_Feb_17_2011.JPG |
|||
| name = சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி |
|||
|caption = சி. இராஜகோபாலாச்சாரி |
|||
| honorific-suffix = |
|||
|office = [[இந்தியத் தலைமை ஆளுநர்]] |
|||
| image = File:C Rajagopalachari Feb 17 2011.JPG |
|||
|monarch = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] |
|||
| caption = |
|||
|primeminister = [[ஜவகர்லால் நேரு]] |
|||
| order1 = முதலமைச்சர், மதராஸ் மாநிலம் |
|||
|term_start = 21 சூன் 1948 |
|||
| term_start1 = 10 ஏப்ரல் 1952 |
|||
|term_end = 26 சனவரி 1950 |
|||
| term_end1 = 13 ஏப்ரல் 1954 |
|||
|predecessor = [[மவுண்ட்பேட்டன் பிரபு|பர்மாவின் மவுண்ட்பேட்டன் பிரபு]] |
|||
| governor1 = [[ஸ்ரீ பிரகாசா]] |
|||
|successor = ''[[இராசேந்திர பிரசாத்]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]]'' |
|||
| monarch1 = |
|||
|office2 = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை முதலமைச்சர்]] |
|||
| primeminister1 = |
|||
|governor2 = [[சிறீ பிரகாசா]] |
|||
| predecessor1 = [[பி. எஸ். குமாரசாமி ராஜா]] |
|||
|term_start2 = 10 ஏப்ரல் 1952 |
|||
| successor1 = [[காமராஜர்|கு. காமராஜர்]] |
|||
|term_end2 = 13 ஏப்ரல் 1954 |
|||
| order2 = இந்திய உள்துறை அமைச்சர் |
|||
|predecessor2 = [[பி. எஸ். குமாரசுவாமிராஜா]] |
|||
| term_start2 = 26 ஜனவரி 1950 |
|||
|successor2 = [[காமராசர்]] |
|||
| term_end2 = [[1951]] |
|||
|office3 = [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உட்துறை அமைச்சர்]] |
|||
| governor2 = |
|||
|primeminister3 = சவகர்லால் நேரு |
|||
| monarch2 = |
|||
|term_start3 = 26 திசம்பர் 1950 |
|||
| primeminister2 = [[ஜவஹர்லால் நேரு]] |
|||
|term_end3 = 25 அக்டோபர் 1951 |
|||
| predecessor2 = [[சர்தார் வல்லபாய் படேல்]] |
|||
|predecessor3 = [[வல்லபாய் பட்டேல்]] |
|||
| successor2 = [[கைலாஷ்நாத் கட்சு]] |
|||
|successor3 = கைலாசுநாத் கச்சு |
|||
| order3 = இந்திய கவர்னர் ஜெனரல் |
|||
|office4 = மேற்கு வங்க ஆளுநர் |
|||
| term_start3 = 21 ஜூன் 1948 |
|||
|premier4 = பிரபுல்லா சந்திரகோசு<br />[[பிதான் சந்திர ராய்]] |
|||
| term_end3 = 25 ஜனவரி 1950 |
|||
|term_start4 = 15 ஆகத்து 1947 |
|||
| governor3 = |
|||
|term_end4 = 21 சூன் 1948 |
|||
| monarch3 = [[ஜார்ஜ் VI (ஐக்கிய ராஜ்ய மன்னர்)|ஜார்ஜ் VI மன்னர்]] |
|||
|predecessor4 = பிரெடெரிக் பரோசு |
|||
| primeminister3 = ஜவஹர்லால் நேரு |
|||
|successor4 = கைலாசுநாத் கச்சு |
|||
| predecessor3 = [[லூயி மவுண்ட்பேட்டன்]] |
|||
|office5 = [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|சென்னை மாகாண முதலமைச்சர்]] |
|||
| successor3 = பதவி நீக்கப்பட்டது |
|||
|governor5 = எர்சுக்கின் பிரபு |
|||
| order4 = மேற்கு வங்க ஆளுனர் |
|||
|term_start5 = 14 சூலை 1937 |
|||
| term_start4 = 15 ஆகஸ்ட் 1947 |
|||
|term_end5 = 9 அக்டோபர் 1939 |
|||
| term_end4 = ஜூன் 1948 |
|||
|predecessor5 = [[கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு]] |
|||
| premier4 = [[பிரபுல்ல சந்திர கோஷ்]],<br />[[பி. சி. ராய்]] |
|||
|successor5 = [[த. பிரகாசம்]] |
|||
| primeminister4 = |
|||
|birth_date = {{birth date|1878|12|10|df=y}} |
|||
| predecessor4 = ஃப்ரெட்ரிக் பர்ரோஸ் |
|||
|birth_place = [[தொரப்பள்ளி]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]<br/>(இன்றைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]]) |
|||
| successor4 = கைலாஷ்நாத் கட்சு |
|||
|death_date = {{death date and age|1972|12|25|1878|12|10|df=y}} |
|||
| order5 = முதலமைச்சர், மதராஸ் மாகாணம் |
|||
|death_place = [[சென்னை]], தமிழ்நாடு |
|||
| term_start5 = 14 ஜூலை 1937 |
|||
|party = [[சுதந்திராக் கட்சி]] <small>(1959–1972)<small> |
|||
| term_end5 = 9 அக்டோபர் 1939 |
|||
|otherparty = [[இந்திய தேசிய காங்கிரசு]] <small>(1957 இற்கு முன்னர்)</small><br />இந்திய தேசிய சனநாயக காங்கிரசு <small>(1957–1959)<small> |
|||
| governor5 = ஜான் எர்ஸ்கின் |
|||
|spouse = அலமேலு மங்களம்மா <small>(1897–1916)</small> |
|||
| govenor-general5 = |
|||
|alma_mater = [[பெங்களூர்ப் பல்கலைக்கழகம்|மத்திய கல்லூரி]]<br />[[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரி]] |
|||
| monarch5 = |
|||
|profession = வழக்கறிஞர்<br />எழுத்தாளர்<br />அரசியல்வாதி |
|||
| primeminister5 = |
|||
|religion = [[இந்து சமயம்]] |
|||
| predecessor5 = கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
|||
|awards = [[File:Bharat Ratna Ribbon.svg|30px]] [[பாரத ரத்னா]] (1954) |
|||
| successor5 = ஆளுனர் ஆட்சி |
|||
|signature = |
|||
| birth_date = 10 டிசம்பர் 1878 |
|||
}} |
|||
| birth_place = [[சேலம் மாவட்டம்]], [[மதராஸ் மாகாணம்]] |
|||
| death_date = 25 டிசம்பர் 1972 (அகவை 94) |
|||
| death_place = [[சென்னை]] |
|||
| nationality = [[இந்தியா|இந்திய]]ர் |
|||
| party = [[இந்திய தேசிய காங்கிரஸ்]],<br />[[சுதந்திராக் கட்சி]] |
|||
| religion = [[இந்து]] |
|||
| alma_mater = சென்ட்ரல் கல்லூரி, [[பெங்களூரு]]<br />[[மாநிலக் கல்லூரி, சென்னை]] |
|||
| profession = [[வழக்கறிஞர்]] |
|||
| occupation = வழக்கறிஞர், [[எழுத்தாளர்]], [[அரசியல்வாதி]] |
|||
| spouse =அலமேலு மங்கம்மா}} |
|||
'''சி. ராஜகோபாலாச்சாரி''' (10 டிசம்பர் [[1878]] - 25 திசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். [[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார். |
'''சி. ராஜகோபாலாச்சாரி''' (10 டிசம்பர் [[1878]] - 25 திசம்பர் [[1972]]),[[தமிழகம்|தமிழக]]த்தில் [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் (அன்றைய [[சேலம்]] மாவட்டத்தில்) [[ஓசூர்|ஓசூருக்கு]] அருகில் உள்ள [[தொரப்பள்ளி]] என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக '''ராஜாஜி''' என்றும் '''சி.ஆர்''' என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசில்]] பெரும் பங்கு வகித்தவர்.[[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். [[கர்நாடகம்]] இணைந்த பகுதிகளைக் கொண்ட [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார். |
||
23:50, 24 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
ராஜாஜி | |
---|---|
சி. இராஜகோபாலாச்சாரி | |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 21 சூன் 1948 – 26 சனவரி 1950 | |
ஆட்சியாளர் | ஆறாம் ஜார்ஜ் |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | பர்மாவின் மவுண்ட்பேட்டன் பிரபு |
பின்னவர் | இராசேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக |
சென்னை முதலமைச்சர் | |
பதவியில் 10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954 | |
ஆளுநர் | சிறீ பிரகாசா |
முன்னையவர் | பி. எஸ். குமாரசுவாமிராஜா |
பின்னவர் | காமராசர் |
உட்துறை அமைச்சர் | |
பதவியில் 26 திசம்பர் 1950 – 25 அக்டோபர் 1951 | |
பிரதமர் | சவகர்லால் நேரு |
முன்னையவர் | வல்லபாய் பட்டேல் |
பின்னவர் | கைலாசுநாத் கச்சு |
மேற்கு வங்க ஆளுநர் | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 21 சூன் 1948 | |
பிரதமர் | பிரபுல்லா சந்திரகோசு பிதான் சந்திர ராய் |
முன்னையவர் | பிரெடெரிக் பரோசு |
பின்னவர் | கைலாசுநாத் கச்சு |
சென்னை மாகாண முதலமைச்சர் | |
பதவியில் 14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939 | |
ஆளுநர் | எர்சுக்கின் பிரபு |
முன்னையவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
பின்னவர் | த. பிரகாசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தொரப்பள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய தமிழ்நாட்டில்) | 10 திசம்பர் 1878
இறப்பு | 25 திசம்பர் 1972 சென்னை, தமிழ்நாடு | (அகவை 94)
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி (1959–1972) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1957 இற்கு முன்னர்) இந்திய தேசிய சனநாயக காங்கிரசு (1957–1959) |
துணைவர் | அலமேலு மங்களம்மா (1897–1916) |
முன்னாள் கல்லூரி | மத்திய கல்லூரி மாநிலக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் எழுத்தாளர் அரசியல்வாதி |
விருதுகள் | பாரத ரத்னா (1954) |
சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர். கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
வாழ்க்கை வரலாறு
கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.[1] ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். எனவே ராஜாஜியின் மகள் மகாத்மா காந்தியின் மருமகள். [2]
வகித்த பதவிகள்
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
பாரத ரத்னா
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
இலக்கியம்
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. .
இந்தி திணிப்பு
1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். [3]
மதுவிலக்கு
இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டா என கேட்டுக்கொண்டார். [4]
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.பார்க்க
படைப்புகள்
- தமிழில் முடியுமா
- திண்ணை ரசாயனம்
- சக்கரவர்த்தித் திருமகன்
- வியாசர் விருந்து
- கண்ணன் காட்டிய வழி
- பஜகோவிந்தம்
- கைவிளக்கு
- உபநிஷதப் பலகணி
- ரகுபதி ராகவ
- முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
- திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
- மெய்ப்பொருள்
- பக்திநெறி
- ஆத்ம சிந்தனை
- ஸோக்ரதர்
- திண்ணை இரசாயனம்
- பிள்ளையார் காப்பாற்றினார்
- ஆற்றின் மோகம்
- வள்ளுவர் வாசகம்
- ராமகிருஷ்ண உபநிஷதம்
- வேதாந்த தீபம்
மேலும் அறிய
- "ராஜாஜி" - கௌசிகன்
- Rajmohan Gandhi (1997). Rajaji, A life. Penguin books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0140269673, ISBN 9780140269673..
ஆதாரங்கள்
- ↑ மணியன், தமிழருவி (டிசம்பர் 25, 2013). "ராஜாஜி என்ற ராஜரிஷி". தி தமிழ் இந்து. Archived from the original on டிசம்பர் 25, 2013. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 25, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ பெருந்தலைவர் காமராசர்; அரு.சங்கர்; மணிவாசகர் பதிப்பகம்; பக்கம் 199
- ↑ நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 512, 527
- ↑ கருணாநிதி சொல்வது பொய்! ஆதாரம் நீட்டுகிறார் ஹண்டே!
புற இணைப்புகள்
- Pages using infobox officeholder with unknown parameters
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- தமிழ் நாட்டு முதலமைச்சர்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
- 1878 பிறப்புகள்
- 1972 இறப்புகள்
- சுதந்திரவாத சிந்தனையாளர்கள்
- அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்
- தமிழ் கலைச்சொல் அறிஞர்
- தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்
- அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
- ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
- தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
- கிருட்டிணகிரி மாவட்ட நபர்கள்