டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →உசாத்துணை |
|||
வரிசை 71: | வரிசை 71: | ||
==உசாத்துணை== |
==உசாத்துணை== |
||
* |
* பேசும் படம் (இதழ்) [[மாதிகை]], ஜனவரி, 1951 |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
01:56, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
டி. ஆர். ராஜகுமாரி | |
---|---|
படிமம்:ராஜகுமாரி.jpg | |
இயற் பெயர் | ராஜாயி |
பிறப்பு | மே 5, 1922 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 20, 1999 | (அகவை 77)
தொழில் | திரைப்பட நடிகை |
நடிப்புக் காலம் | 1939 - 1963 |
துணைவர் | திருமணம் செய்யவில்லை |
டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ் பெற்ற இசை மேதை. பிறந்த சில நாட்களில் தகப்பனாரை இழந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
திரைப்படத்துறையில்
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
ராஜகுமாரி பல புகழ் பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ”ஜிப்சி” நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ”டிரம்ஸ்” நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
இவர் 1963 இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
இவர் நடித்த திரைப்படங்கள்
- குமார குலோத்துங்கன் (1939)
- சூர்யபுத்ரி (1941)
- மனோன்மணி (1942)
- சதி சுகன்யா (1942)
- பிரபாவதி (1942)
- சிவகவி (1943)
- குபேர குசேலா (1943)
- ஹரிதாஸ் (1944)
- சாலிவாகனன் (1945)
- வால்மீகி (1946)
- விகடயோகி (1946)
- சந்திரலேகா (1948)
- சந்திரலேகா (1948)
- பிரம்மரிஷி விஷ்வாமித்திரா (1948)
- கிருஷ்ணபக்தி (1949)
- பவளக்கொடி (1949)
- இதய கீதம் (1950)
- விஜயகுமாரி (1950)
- வனசுந்தரி (1951)
- அமரகவி (1952)
- பணக்காரி (1953)
- என் வீடு (1953)
- அன்பு (1953)
- வாழப்பிறந்தவள் (1953)
- மனோகரா (1954)
- நல்ல தங்கை (1955)
- குலேபகாவலி (1955)
- புதுமைப்பித்தன் (1957)
- மல்லிகா (1957)
- தங்கமலை ரகசியம் (1957)
- தங்கப்பதுமை (1959)
- பங்கஜவல்லி
- மந்தாரவதி
உசாத்துணை
- பேசும் படம் (இதழ்) மாதிகை, ஜனவரி, 1951