இரண்டாம் விருபக்ஷ ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
{{விஜயநகரப் பேரரசு}}
[[File:Vijaynagar Virupaksha Inscription, 1481 AD, Thiruvanamalai District.jpg|thumb|235px|இரண்டாம் விருபக்ஷ ராயன் தமிழ் கல்வெட்டு, 1605 AD, Thiruvanamalai District, ASI Museum, [[வேலூர்க் கோட்டை]]]]
[[File:Vijaynagar Virupaksha Inscription, 1481 AD, Thiruvanamalai District.jpg|thumb|235px|இரண்டாம் விருபக்ஷ ராயன் தமிழ் கல்வெட்டு, 1481 AD, Thiruvanamalai District, ASI Museum, [[வேலூர்க் கோட்டை]]]]


'''இரண்டாம் விருபக்ஷ ராயன்''' (கி.பி. 1465-1485) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் [[சங்கம மரபு|சங்கம மரபினன்]].
'''இரண்டாம் விருபக்ஷ ராயன்''' (கி.பி. 1465-1485) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் [[சங்கம மரபு|சங்கம மரபினன்]].

12:25, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646
இரண்டாம் விருபக்ஷ ராயன் தமிழ் கல்வெட்டு, 1481 AD, Thiruvanamalai District, ASI Museum, வேலூர்க் கோட்டை

இரண்டாம் விருபக்ஷ ராயன் (கி.பி. 1465-1485) விஜயநகரப் பேரரசை 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் சங்கம மரபினன்.

இவன், தனக்கு முன்னிருந்த மல்லிகார்ஜுன ராயனை ஆட்சியிலிருந்து அகற்றி அரசைக் கைப்பற்றினான். மல்லிகார்ஜுன ராயன் திறமையற்ற, ஊழல் மலிந்த அரசனாக இருந்ததுடன், பேரரசின் எதிரிகளுடன் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்தான். எனினும், இரண்டாம் விருபக்ஷ ராயனும், முன்னவனை விடச் சிறந்தவனாக இருக்கவில்லை.

தோல்விகள்

தனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் வலுவின்மையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் கொங்கண் கரையோரப் பகுதிகளை பஹமானி அரசிடம் இழந்தான். பஹமானி சுல்தான் மூன்றாம் முஹம்மத் ஷா அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் கோவா உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பஹமானி சுல்தான், கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் புருஷோத்தம கஜபதி, எல்லைக்குள் புகுந்து திருவண்ணாமலையைப் பிடித்தான். இத் தோல்விகள் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது.

இறப்பு

இந் நிலை, 1485 இல், விருபக்ஷ ராயன் தனது சொந்த மகனான பிரௌத ராயன் கையாலேயே கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_விருபக்ஷ_ராயன்&oldid=2091054" இலிருந்து மீள்விக்கப்பட்டது