சுயம்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11: வரிசை 11:


[[பகுப்பு:திருமண முறைகள்]]
[[பகுப்பு:திருமண முறைகள்]]
[[பகுப்பு:இந்து மதம்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]

12:12, 15 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பழங்காலத்தில் தன் மகளுக்கு தக்க மணமகனை தேடும் முயற்சியில் மன்னன் எல்லா நாட்டு அரசரையும் ஓர் சபையில் கூட்டி, தன் மகள் விரும்புபவனுக்கு மணமுடித்துக் கொடுத்தலே சுயம்வரம் ஆகும். இதனை தன் வரிப்பு எனவும் அழைப்பர். அதாவது தனக்கான கணவனை ஒரு பெண் தானே வரித்துக் கொள்ளல் எனப் பொருள்படும்.

சுயம்வர முறை

இந்த சுயம்வர முறை இளவரசிகள் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்வு செய்து கொள்ள மட்டும் பயன்படுத்திய ஒரு முறையாக பல பழங்கதைகள் உள்ளன. இக்கதைகளிலுள்ளபடி சுயம்வரம் என்பது, இளவரசியின் தோழியானவள் ஒவ்வோர் அரசராக, அவர்களின் வீரச்செயல்கள், பண்பு, குலப்பெருமை, மாண்பு முதலிய குணங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பாள். இவற்றில் மணமகளினை கவரும் ஒருவனுக்கு அவள் மாலையிட்டு மணமகனைத் தேர்வு செய்வார்.

பழங்கதைகளில் சுயம்வரம்

நளன் தமயந்தி, மகாபாரதம், இராமாயணம் போன்ற பழங்கதைகளில் சுயம்வரக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றின்படி, நள தமயந்தியில், காத்திருந்த தேவர்களையெல்லாம் விட்டுவிட்டு தன் அறிவுக்கூர்மையால் நளனை இனங்கண்டும், இராமயணத்தில் வில்லினை ஒடித்தும், மகாபாரதத்தில் தன் வில்வித்தையால் திரௌபதியை அருச்சுனனும், உடற்பலத்தால் தன் உடன்பிறந்தோருக்கான மணமக்களை பிற அரசரிடமிருந்து மீட்டு வீட்டுமரும் தமக்கேற்ற இணைகளையோ, தம் சார்ந்தோருக்கான இணைகளையோ தேடிக்கொண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயம்வரம்&oldid=2076615" இலிருந்து மீள்விக்கப்பட்டது