தேசிக விநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 54: | வரிசை 54: | ||
* ''குழந்தைச்செல்வம்'' |
* ''குழந்தைச்செல்வம்'' |
||
* ''கவிமணியின் உரைமணிகள்'' |
* ''கவிமணியின் உரைமணிகள்'' |
||
* [[https//ta.wikisource.org/பக்தி_மஞ்சரி|பக்தி மஞ்சரி]] |
* #REDIRECT[[https//ta.wikisource.org/பக்தி_மஞ்சரி|பக்தி மஞ்சரி]] |
||
==ஆதாரம்== |
==ஆதாரம்== |
14:21, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | |
---|---|
பிறப்பு | ஜூலை 27, 1876 தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம் |
இறப்பு | செப்டம்பர் 26, 1954 | (அகவை 78)
அறியப்படுவது | கவிஞர் |
பட்டம் | கவிமணி |
பெற்றோர் | சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி |
வாழ்க்கைத் துணை | உமையம்மை |
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஜூலை 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிவதாணுப்பிள்ளை-ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 ல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.[1]. [2].
ஆசிரியர் பணி
நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
மொழிபெயர்ப்பாளர்
எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.
ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.[3].
விருதுகள்
24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.[4]. 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.[5]
கவிமணியின் நூல்கள்
- அழகம்மை ஆசிரிய விருத்தம்
- ஆசிய ஜோதி , (1941)
- மலரும் மாலையும், (1938)
- மருமக்கள்வழி மான்மியம், (1942)
- கதர் பிறந்த கதை, (1947)
- உமார் கய்யாம் பாடல்கள், (1945)
- தேவியின் கீர்த்தனங்கள்
- குழந்தைச்செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
- #REDIRECTபக்தி மஞ்சரி
ஆதாரம்
- திருவேங்கிமலை சரவணன், தலை நிமிர்ந்த தமிழர்கள் (குமுதம் வெளியிடு )
- முல்லை நிலையம் வெளியிட்ட மலரும் மாலையும் என்ற நூலில் உள்ள ஆசிரியர் குறிப்பு
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=1079596
- ↑ http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai
- ↑ http://eluthu.com/kavignar/Kavimani-Desigavinayagam-Pillai.php
- ↑ http://www.rhythemmusic.net/component/content/article/86/1020-desigavinayagam-pillai-index
- ↑ http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai