பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
|othername = நடிகர் மன்னர்
|othername = நடிகர் மன்னர்
| deathdate = {{death date and age|1951|9|23|1916|5|5|mf=y}}
| deathdate = {{death date and age|1951|9|23|1916|5|5|mf=y}}
| deathplace = [[மெட்ராஸ்]], [[சென்னை மாகாணம்]], {{IND}}
| deathplace = [[புதுக்கோட்டை]], [[சென்னை மாகாணம்]], {{IND}}
|spouse= ஏ. சகுந்தலா
|spouse= ஏ. சகுந்தலா
|children = ராஜா பகதூர்
|children = ராஜா பகதூர்
வரிசை 33: வரிசை 33:


==மறைவு==
==மறைவு==
[[1951]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 23]] இல் தமது 35ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் [[வனசுந்தரி]]. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் [[சுதர்சன்]] இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.
[[1951]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 23]] இல் தமது 35ஆவது வயதில் சின்னப்பா [[புதுக்கோட்டை]]யில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் [[வனசுந்தரி]]. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் [[சுதர்சன்]] இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

07:34, 28 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பி. யூ. சின்னப்பா

இயற் பெயர் சின்னசாமி
பிறப்பு (1916-05-05)மே 5, 1916
புதுக்கோட்டை சமத்தானம், பிரித்தானிய இந்தியா
இறப்பு செப்டம்பர் 23, 1951(1951-09-23) (அகவை 35)
புதுக்கோட்டை, சென்னை மாகாணம்,  இந்தியா
வேறு பெயர் நடிகர் மன்னர்
துணைவர் ஏ. சகுந்தலா
பிள்ளைகள் ராஜா பகதூர்
பெற்றோர் உலகநாதன் பிள்ளை
மீனாட்சி அம்மாள்

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

1916 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.

நாடகங்களில் பாடி நடிப்பு

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். இக்கம்பெனியில் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். பின்னர் அவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 15 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. இராமச்சந்திரன், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இசைக்கச்சேரி

தனது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே.[1] படம் பெரு வெற்றி பெற்றது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு.

ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது.

மறைவு

1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 இல் தமது 35ஆவது வயதில் சின்னப்பா புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._உ._சின்னப்பா&oldid=2013398" இலிருந்து மீள்விக்கப்பட்டது