மு. மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 32: வரிசை 32:


மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் ''"ஊர்வலம்"'' தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது ''"சோழ நிலா"'' என்னும் வரலாற்று நாவல் "ஆனந்த விகடன்" இதழ் நிகழ்த்திய பொன்விழ இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். தற்போது மேத்தா திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் ''"ஊர்வலம்"'' தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது ''"சோழ நிலா"'' என்னும் வரலாற்று நாவல் "ஆனந்த விகடன்" இதழ் நிகழ்த்திய பொன்விழ இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். தற்போது மேத்தா திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]

13:04, 9 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

மு. மேத்தா பெரியகுளத்தில் 05.09.1945 ஆண்டு பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.


உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர்.


காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.


"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

இறப்பினில் கண் விழிப்பேன்

மரங்களில் நான் ஏழை

எனக்கு வைத்த பெயர் வாழை"


போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.


"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தா முன்னணியில் நிற்பவர்.


இவருடைய படைப்புக்கள் சில..

  1. கண்ணீர்ப் பூக்கள்
  2. ஊர்வலம்
  3. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  4. நந்தவன நாற்காலி
  5. வெளிச்சம் வெளியே இல்லை


மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் "ஆனந்த விகடன்" இதழ் நிகழ்த்திய பொன்விழ இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். தற்போது மேத்தா திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._மேத்தா&oldid=201246" இலிருந்து மீள்விக்கப்பட்டது