மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58: வரிசை 58:


== மறைவு==
== மறைவு==
மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref>
மனோரமா தனது 72 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1361557 ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார்], தினமலர், அக்டோபர் 11, 2015</ref><ref name=hindu>{{cite web|url=http://www.thehindu.com/features/cinema/legendary-tamil-actor-legendary-tamil-actor-manorama-passes-away/article7747877.ece?homepage=true|title=Manorama, who matched protagonists of her day, passes away|publisher=[[தி இந்து]]| date=11 அக்டோபர் 2015}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

05:09, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

மனோரமா
பிறப்புகோபிசாந்தா
(1943-05-26)26 மே 1943
மன்னார்குடி, தமிழ்நாடு[1]
இறப்பு10 அக்டோபர் 2015(2015-10-10) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
மற்ற பெயர்கள்ஆச்சி
செயற்பாட்டுக்
காலம்
1943-2015
வாழ்க்கைத்
துணை
எஸ். எம். இராமநாதன்
(தி.1964–1966) (மணமுறிவு)
பிள்ளைகள்பூபதி (பி. 1965)

மனோரமா (26 மே 1943[சான்று தேவை] - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். [2] இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.[3] இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.[4] 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[5] தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.[6] "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர்[7] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.

ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம்,[7] தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.[8] மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.[1] பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.[7]

திரைத்துறைப் பங்களிப்புகள்

விரிவான தரவுகளுக்கு -

.

மலையாளத் திரைப்படங்கள்

  • மில்லினியம் ஸ்டார்ஸ்
  • சீதா கல்யாணம்

தெலுங்குத் திரைப்படங்கள்

  • பாவா நச்சாடு
  • கிருஷ்னார்ஜுனா
  • அருந்ததி

இந்தித் திரைப்படங்கள்

பாடிய பாடல்கள்

  • "வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)
  • "தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)
  • "மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)
  • "தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)
  • "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)
  • "பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)

பெற்ற விருதுகள்

சொந்த வாழ்க்கை

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

மறைவு

மனோரமா தனது 72 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[9][7]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 There’s no stopping her. Hinduonnet. 2009/02/02
  2. "The endearing `aachi'". The Hindu. 7 July 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26.
  3. "வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  4. "The Hindu : Evening of stardust memories". Hinduonnet.com. 27 பிப்ரவரி 2002. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36
  6. A Tamil entertainment ezine presenting interesting contents and useful services. Nilacharal. Retrieved on 2011-07-27.
  7. 7.0 7.1 7.2 7.3 "Manorama, who matched protagonists of her day, passes away". தி இந்து. 11 அக்டோபர் 2015.
  8. "நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது || actress manorama cinema history". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  9. ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார், தினமலர், அக்டோபர் 11, 2015

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_(நடிகை)&oldid=1932211" இலிருந்து மீள்விக்கப்பட்டது