ஐதராபாத் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56: வரிசை 56:


[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]

15:55, 25 செப்தெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஐதராபாத்து இராச்சியம்
ریاست حیدرآباد
హైదరాబాద్ రాష్ట్రం
ಹೈದರಾಬಾದ್ ಪ್ರಾಂತ್ಯದ हैदराबाद राज्य
1803–1948
கொடி of ஐதராபாத்து
கொடி
சின்னம் of ஐதராபாத்து
சின்னம்
ஐதராபாத் (அடர் பச்சை) மற்றும் பீரார் மாகாணம் (இளம் பச்சை).
ஐதராபாத் (அடர் பச்சை) மற்றும் பீரார் மாகாணம் (இளம் பச்சை).
நிலைபிரித்தானிய இநிதயாவில் மன்னராட்சி (1803–1947)
அங்கீகரிக்கப்படாத நாடு (1947–1948)
தலைநகரம்அவுரங்காபாத் 1724 முதல் 1763 வரை, ஐதராபாத்து 1763 முதல் 1948 வரை
பேசப்படும் மொழிகள்தக்கினி, மராத்தி, தெலுங்கு, பாரசீகம், கன்னடம்
சமயம்
இசுலாம்
அரசாங்கம்மன்னராட்சி (1803–1948)
இந்திய ஒன்றியத்தின் மாகாணம் (1948–1950)
இந்தியாவின் மாநிலம் (1950–1956)
நிசாம் 
• 1720–48
கமார்-உத்-தின் கான், (முதல்)
• 1911–48
உசுமான் அலி கான் (கடைசி)
பிரதமர் 
• 1724–1730
இவாசு கான் (முதல்)
• 1947–1948
மீர் லயிக் அலி (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
1803
1946
18 செப்டம்பர் 1948
1 நவம்பர் 1956
பரப்பு
215,339 km2 (83,143 sq mi)
நாணயம்ஐதராபாதி ரூபாய்
முந்தையது
பின்னையது
முகலாயப் பேரரசு
மராத்தா பேரரசு
Union of India

ஐதராபாத்து இராச்சியம் இந்தியாவின் தென்மத்திய பகுதியில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். 1724 முதல் 1948 வரை நிசாம் சந்ததியினரால் ஆளப்பட்டு வந்தது. இதன் தலைநகரம் ஐதராபாத்தாக இருந்தது.

தற்கால உசுபெக்கிசுத்தானின் சமர்கந்து பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் முகலாயப் பேரரசில் பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை ஐதராபாத் நிசாம் தோல்வியடையச் செய்து 1724இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.

முகலாய பேரரசு நலிவுற்று மராட்டியப் பேரரசு வலிவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்‌ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.[1][2]

  1. Tony Jaques (2007). Dictionary of Battles and Sieges: F-O. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-33538-9. http://books.google.com/books?id=Dh6jydKXikoC. 
  2. Pradeep Barua (2005). The State at War in South Asia. U of Nebraska Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8032-1344-1. http://books.google.com/books?id=FIIQhuAOGaIC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_இராச்சியம்&oldid=1923856" இலிருந்து மீள்விக்கப்பட்டது