ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
|native_name = Eksath Janatha Nidahas Sandhanaya |
|native_name = Eksath Janatha Nidahas Sandhanaya |
||
|lang1 = சிங்களம் |
|lang1 = சிங்களம் |
||
| |
|பெயர்_lang1 = එක්සත් ජනතා නිදහස් සන්ධානය |
||
|lang2 = தமிழ் |
|lang2 = தமிழ் |
||
| |
|பெயர்_lang2 = ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
||
|logo = |
|logo = |
||
|colorcode = Blue |
|colorcode = Blue |
03:26, 6 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி United People's Freedom Alliance | |
---|---|
Eksath Janatha Nidahas Sandhanaya | |
தலைவர் | மகிந்த ராசபக்ச |
செயலாளர் | ஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த |
தொடக்கம் | 2004 |
தலைமையகம் | 301 ரி. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10 |
கொள்கை | சமூக மக்களாட்சி, தேசியவாதம் |
இலங்கை நாடாளுமன்றம் | 160 / 225 |
மாகாணசபைகள் | 269 / 417 |
தேர்தல் சின்னம் | |
வெற்றிலை | |
இணையதளம் | |
sandanaya.lk | |
இலங்கை அரசியல் |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (United People's Freedom Alliance, சிங்களம்: එක්සත් ජනතා නිදහස් සන්ධානය) என்பது இலங்கையின் ஓர் அரசியல் கூட்டணி ஆகும். 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் தற்போதைய தலைவர் மகிந்த ராசபக்ச, செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த.[1][2]
இது பின்வரும் கட்சிகளினால் உருவாக்கப்பட்டது:
- இலங்கை சுதந்திரக் கட்சி
- மக்கள் விடுதலை முன்னணி
- இலங்கை மக்கள் கட்சி
- முஸ்லிம் தேசிய ஐக்கிய முன்னணி
- மக்கள் ஐக்கிய முன்னணி
- சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
- தேச விமுக்த்தி ஜனதா கட்சி
வரலாறு
கூட்டணியின் முக்கிய கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியாகும். எனினும் 2005 சனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் தேர்தல்களில் ஒன்றாக போட்டியிட்டன.
2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.[3]
ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. 2005 அரசுத்தலைவர் தேர்தலில், இக்கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராசபக்ச 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். 2010 அரசுத்தலைவர் தேர்தலிலும் மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.[4]
கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்
- அகில இலங்கை முசுலிம் காங்கிரசு
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
- தேச விமுக்தி ஜனதா பக்சய
- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
- ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்
- ஜாதிக எல உறுமய
- லங்கா சமசமாஜக் கட்சி
- லிபரல் கட்சி
- மகாஜன எக்சத் பெரமுன
- தேசிய சுதந்திர முன்னணி
- சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய
- இலங்கை சுதந்திரக் கட்சி
- இலங்கை மக்கள் கட்சி
- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
- மலையக மக்கள் முன்னணி
மேற்கோள்கள்
- ↑ "New blow for Sri Lankan peace pact". CNN News. சனவரி 20, 2004. http://www.cnn.com/2004/WORLD/asiapcf/01/20/slanka.peace/.
- ↑ IRIN Asia | Asia | Sri Lanka | SRI LANKA: Testing times ahead of local elections in east | Governance Conflict | Feature
- ↑ "President wins Sri Lanka election". பிபிசி. ஏப்ரல் 4, 2004. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3596227.stm.
- ↑ [1]