உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்+
வரிசை 2: வரிசை 2:
'''உத்தராகண்டம்''' (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'', முன்னாளில் '''உத்தராஞ்சல்''' (''Uttaranchal''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9 il [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
'''உத்தராகண்டம்''' (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'', முன்னாளில் '''உத்தராஞ்சல்''' (''Uttaranchal''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9 il [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசூரி]], [[அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.


== ஆட்சிப் பிரிவுகள் ==
== மாவட்டங்கள் ==
உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
உத்தராகண்டம் மாநிலம், 13 [[மாவட்டம்|மாவட்டங்களாக]] பிரிக்கப்பட்டுள்ளது. [[சமோலி மாவட்டம்|சமோலி]], [[தேராதூன் மாவட்டம்|தேராதூன்]], [[ஹரித்வார் மாவட்டம்|ஹரித்வார்]], [[பவுரி மாவட்டம்|பவுரி]], [[ருத்ரப்பிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]], [[தெஹ்ரி மாவட்டம்|தெஹ்ரி]], [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]] ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள்கர்வால் ஆட்சிப் பிரிவிலும், [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[பாகேஷ்வர் மாவட்டம்|பாகேஷ்வர்]], [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]], [[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]], [[பித்தோர்கர் மாவட்டம்|பித்தோர்கர்]], [[உதம் சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]] ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>


== மக்கள் ==
== மக்கள் ==

14:09, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்

உத்தராகண்டம் (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड, முன்னாளில் உத்தராஞ்சல் (Uttaranchal), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000, நவம்பர் 9 il உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

ஆட்சிப் பிரிவுகள்

உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேராதூன், ஹரித்வார், பவுரி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள்கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனித்தால், பித்தோர்கர், உதம்சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும். இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.[1]

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [2]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 8,489,349 100%
இந்துகள் 7,212,260 84.96%
இசுலாமியர் 1,012,141 11.92%
கிறித்தவர் 27,116 0.32%
சீக்கியர் 212,025 2.50%
பௌத்தர் 12,434 0.15%
சமணர் 9,249 0.11%
ஏனைய 770 0.01%
குறிப்பிடாதோர் 3,354 0.04%

2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்

சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத்துக் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத்துக் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.[3].[4]

நிவாரணப் பணிகள்

இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.[5]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India
  2. Census of india , 2001
  3. "கேதார்நாத் சிவன் கோவில் வழிபாட்டிற்கு திறப்பு". http://temple.dinamalar.com/news_detail.php?id=30810. 
  4. உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு
  5. http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தராகண்டம்&oldid=1881606" இலிருந்து மீள்விக்கப்பட்டது