ராபர்ட் கிளைவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி →மேற்கோள்கள்: குறுங்கட்டுரை வார்ப்புரு நீக்கம் |
||
வரிசை 51: | வரிசை 51: | ||
<references/> |
<references/> |
||
{{stub}} |
|||
[[பகுப்பு:1725 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1725 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:1774 இறப்புகள்]] |
[[பகுப்பு:1774 இறப்புகள்]] |
07:27, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
ராபர்ட் கிளைவ் | |
---|---|
ராபர்ட் கிளைவ் | |
பட்டப்பெயர்(கள்) | ராபர்ட் கிளைவ் |
சார்பு | பெரிய பிரித்தானியா |
சேவை/ | பிரித்தானியா |
சேவைக்காலம் | 1746-1774 |
தரம் | மேஜர் ஜெனரல் |
படைப்பிரிவு | பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி |
கட்டளை | இந்தியாவின் தலைமைத் தளபதி |
போர்கள்/யுத்தங்கள் | ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் மதராஸ் சண்டை கர்நாடகப் போர்கள் ஆற்காடு சண்டை ஆரணி சண்டை செங்கல்பட்டு சண்டை ஏழாண்டுப் போர் பிளாசி சண்டை |
வேறு செயற்பாடுகள் | வங்காளத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆளுனர் |
.
மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (செப்டம்பர் 29 , 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். வாரன் ஹேஸ்டிங்சும் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.[1].[2].[3]
பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை
ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அத்தை வீட்டில் பால பருவத்தை கழித்த கிளைவ் இளைஞனானதும் வீட்டுக்கு அடங்காமல் திரிந்தார். குறிப்பாக பொறுக்கியாக திரிந்தவர் தன் நண்பகளை சேர்த்துகொண்டு டிரைட்டன் சந்தையில் உள்ள கடைகளில் மிரட்டி மாமுல் வசூளித்தார் என்கின்றன வரலாற்று குறிப்புகள்.
இரண்டு முறை ஜெயிலுக்கு சென்று வந்த கிளைவை அவர் தந்தை ரிச்சர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எழுத்தர் வேலைக்கு அனுப்பினார்.[4]
தொழில்முறை வாழ்க்கை
1743- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி மெட்வே என்ற இடத்தில் இருந்து விஞ்செஸ்டர் என்ற பாய்மரக்கப்பலில் இந்தியாவுக்கு பயணம் மேற்க்கொண்டார் கிளைவ். அப்போது அவருக்கு வயது 17, இவரின் வயதுள்ள பையன்களை சேர்த்துகொண்டு உணவு மற்றும் சவரக்கூலிகளை தரமுடியாது என தகராறு செய்து மற்றும் குடித்துவிட்டு ஆட்டம் போட்டு கப்பல் கேப்டனால் தண்டிக்கப்பட்டார்.18 மாதங்களுக்கு பின் மதராஸ் வந்து சேர்ந்த கிளைவ் கிழக்கிந்திய கம்பெனியில் கிளார்க் வேலைக்கு சேர்ந்தார், அவருக்கு தரப்பட்ட சம்பளம் ஆண்டுக்கு 5 பவுண்ட். இந்திய மதிப்பில் 50 ரூபாய், சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம். சில மாதங்களிலேயே மேல் அதிகாரிகளின் பலவீனங்களை தெரிந்துகொண்ட கிளைவ் கையூட்டு கொடுத்து தனது காரியத்தை சாதித்துகொண்டார், பின்பு மெட்ராஸ் கவர்னராக பதவியை பிடித்த கிளைவ் தனது அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி பெரும் பணத்தை சேர்த்தார், இடையில் தனது நண்பர் எட்மண்ட் மஸ்கில்னெவின் தங்கை மர்க்கரெட்டை திருமணம் செய்த கிளைவ் தனது மன வாழ்கையை பம்பாயில் சிறிது காலம் வாழ்ந்தார்.1753-ம் ஆண்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.1760-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற கிளைவிடம் 2 லட்சத்து 34 ஆயிரம் பவுண்ட் பணம் இருந்தது, (அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 81 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய் ) தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை எளிதாக இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல வசதியாக தங்கம் மற்றும் வைரமாக மாற்றிகொண்டார் கிளைவ், இப்படி டோனிங்டன் என்ற கப்பலில் அவர் 1400 பாளங்களாக எடுத்து சென்ற தங்கம், புயலில் சிக்கி கடலில் முழ்கிபோனது அதை இன்றும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு தனது தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்த கிளைவ் தனது தங்கைகளுக்கு மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததுடன் லண்டன் நகரின் முக்கிய இடத்தில் 92,000 பவுண்ட் விலை கொடுத்து பண்ணை வீடு ஒன்றை வாங்கி பிரபல பணக்காரர்களில் ஒருவராக தன்னை காட்டிகொண்டார், கிளைவ் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பெரும் ஊழல் செய்து பணம் சம்பாதித்தார் என்ற குற்றசாட்டு எழுந்தபோது அதை மறுத்த கிளைவ் பல நாடகங்களை அரங்கேற்றினார்.கிழக்கிந்திய கம்பனியை ஏமாற்றிய கிளைவால் மனசாட்சியை ஏமாற்றமுடியவில்லை அவரின் உடல் மிக மோசமான சூழ்நிலையை அடைந்தது தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டார். சாவோடு போராடிக்கொண்டிருந்த கிளைவ், தனது கடந்த காலம் இந்தியாவின் எதிர்காலத்தை கொள்ளையடித்ததன் வினைதான் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை கிளைவ் உணர்ந்தே இருந்தார், அவரின் நாள் குறிப்புகள் இதை உறுதி செய்கின்றன.[5]
குடும்பம்
மனைவி : மார்க்கரட் மஸ்கலீன் மகன்கள் : எட்வர்ட் கிளைவ், ராபர்ட் கிளைவ் ஜுனியர், சார்லட் கிளைவ், ரிச்சர்ட் கிளைவ், ராபர்ட் கிளைவ், மகள்கள் : ரெப்பாக்வ் கிளைவ், மார்கரட் கிளைவ், எலிசபெத் கிளைவ், ஜேன் கிளைவ்
இறப்பு
தீவிரமான மனச்சிதைவு மற்றும் பித்தப்பை கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவர் தூக்கம் வருவதற்காக தினமும் போதை ஊசி போட்டுகொண்டிருந்தார், அது நரம்பு தளர்ச்சியை அதிகமாக்கியது. அவரால் யாரிடமும் பேச முடியவில்லை, வலியும் வேதனையும் மிதமிஞ்சிய கோபத்தையே உருவாக்கியது. அழுது கதறியதோடு தன்னை கொன்றுவிடுமாறு நாளெல்லாம் கத்திக்கொண்டே இருந்தார்.1774-ஆம் ஆண்டு தனது 49-வது வயதில் இங்கிலாந்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது கழுத்தை தானே அருத்துகொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தற்கொலை செய்துகொண்டார் ராபெர்ட் கிளைவ்.இந்தியாவை தனதாக்கிகொள்ள முயன்ற கிளைவ், தற்கொலை செய்துகொண்ட காரணத்தால் தேவாலயத்தில் இறுதி சடங்குகள் நடத்தகூட அனுமதிக்கப்படவில்லை. தேவாலயங்கள் தற்கொலைகளை ஏற்றுகொள்வதில்லை. கிளைவின் கல்லறையில் பொறிக்கப்படும் கல்கூட அனுமதிக்கப்படவில்லை, அடையாளமற்ற ஒரு மண் மேடாகவே அவர் புதைந்து போனார்.[சான்று தேவை]