மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:


== தமிழர் மரபில் மற்போர் ==
== தமிழர் மரபில் மற்போர் ==
[[மல்லாடல்]] பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளை பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாக பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்
[[மல்லாடல்]] பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளை பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாக பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் [[முதலாம் நரசிம்மவர்ம பல்லவன்]]
மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்கு சிறப்பு பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்கு சிறப்பு பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
===கோதா===
===கோதா===

10:07, 4 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

நடாம் விழா

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்கின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது."[1] மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்க கலையாக பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

தமிழர் மரபில் மற்போர்

மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளை பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாக பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்கு சிறப்பு பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.

கோதா

மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார் படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கை கல்கூட இல்லாமல் சுத்தமாக்கி மெண்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை, தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்துளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.[2],

தமிழ்த் திரைப்படங்களில் மற்போர்

காஞ்சித்தலைவன்,பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.[3]

மேற்கோள்கள்

  1. மன்னரும் மல்லரும் கோ. தில்லை கோவிந்தராஜன்
  2. தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரகள், தேசீய கல்வி பாலாஜி புத்தக நிலையம்,சென்னை, 1989 பக்கம்11
  3. Paruthi Veeran - Karthi Sivakumar Against Wrestlers

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மற்போர்&oldid=1801978" இலிருந்து மீள்விக்கப்பட்டது