பழங்காலத் தமிழர் வாணிகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவக்கம்
 
சி Arulghsr பயனரால் பழங்காலத் தமிழர் வாணிகம், பழங்காலத் தமிழர் வாணிகம் (நூல்) என்ற தலைப்புக்கு நகர்...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:43, 26 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

பழங்காலத் தமிழர் வாணிகம் என்னும் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய நூலாகும். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனத்தார் 1990இல் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர்.

நூலைப்பற்றி

இந்நூல் கடைச்சங்க காலத்தில் (அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்தக் காலத் தமிழர் இந்தியாவின் வடக்கே கங்கைக்கரை (பாடலிபுத்திரம்) முதலாக கிழக்குக்கரை மேற்குக்கரை நாடுகளில் நடத்திய வானிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கழக்கே இலங்கை, சாவகநாடு (கிழக்கிந்தியத் தீவுகள்),மலேயா,பர்மா,முதலான கடல் கடந்த நாடுகளில் வானிகத்தைப்பற்றியும், மேற்கே அரபு நாடுகள், எகிப்து, உரோம சாம்ராஜ்சியம் ஆகியநாடுகளுடன் செய்த வானிகத்ததைப்பற்றியும் கூறுகிறது. [1]

உள்ளடக்கம்

  1. சங்க கால மக்கள் வாழ்க்கை
  2. பண்ட மாற்று
  3. போக்குவரத்து சாதனங்கள்
  4. தமிழ் நாட்டு வானிகம்
  5. பிறநாட்டு வானிகம்
  6. பழங்காலத் துறைமுகப்பட்டிணங்கள்
  7. தமிழகத்தின் மேற்குக்கரை துறைமுகங்கள்
  8. இலங்கைத் துறைமுகங்கள்
  9. விளைபொருளும் உற்பத்திப் பொருளும்

குறிப்புகள்

  1. பழங்காலத் தமிழர் வாணிகம்,மயிலை சீனி. வேங்கடசாமி பக்.5