சூரபத்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
*துவக்கம்* |
சி added Category:அரக்கர்கள் using HotCat |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
[[பகுப்பு:அரக்கர்கள்]] |
15:40, 21 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
இந்து தொன்மவியலின் படி சூரபத்மன் பிரம்மனின் மகனான காசிபருக்கும் மாயை எனும் அரக்கிக்கும் பிறந்தவராவார். இவர் அசுர குருவான சுக்கிலாச்சாரியாரின் ஆலோசனையால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து, சிவபெருமானின் சக்தியால் மட்டுமே இறப்பு என்று வரம் வாங்கினார்.
சூரபத்மன் வீரமகேந்திரபுரியை ஆட்சி செய்தார். பதுமகோமளை என்பவரை மணந்து மூலம்பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், வச்சிரவாகு ஆகியோர்களை பெற்றார். தேவர்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தமையால் சிவபெருமானின் சக்தியான முருகனால் இரண்டாக பிளக்கப்பட்டார். ஒரு பாகம் மயிலாகவும், மறு பாகம் சேவலாகவும் முருகனிடமே சரணடைந்தார்.
சூர வதம்
சூரனுடைய மரணம் முருகப்பெருமான் பக்தர்களால் சூர சம்ஹாரம் என்ற பெயரில் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சஷ்டி திதி ன்று திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தின் கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.[1]