பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி →அமைவு |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
==அமைவு == |
==அமைவு == |
||
நீரிணையின் இரண்டு [[கிமீ]] தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும் |
நீரிணையின் இரண்டு [[கிமீ]] தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும். |
||
*[http://wikimapia.org/#lat=9.2828488&lon=79.2052218&z=19&l=0&m=b&v=8 விக்கிமேப்] |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
18:04, 21 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
பாம்பன் பாலம் | |
---|---|
பாம்பன் சாலை மற்றும் ரயில் பாலம் | |
அதிகாரப் பூர்வ பெயர் | அன்னை இந்திரா காந்தி பாலம் |
போக்குவரத்து | 2 வழி சாலை போக்குவரத்து |
தாண்டுவது | பாக்கு நீரிணை |
இடம் | ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா |
அமைவு | 9°16′56.70″N 79°11′20.1212″E / 9.2824167°N 79.188922556°E |
பாம்பன் பாலம் (Pamban Bridge) பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு கொடுங்கைப் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில்பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம், தொடருந்துப் பாலம் இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.
இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
கட்டுமானம்
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது[1]. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
கட்டுமானப் பொருட்கள்
- பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகல் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது.
- இதனை கட்ட சிமெந்து 5000 டன், எஃகு இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
புதுப்பித்தல்
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தது[1]. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப் பட விருக்கிறது.
வலிமை
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதி, கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும்[1] 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
அமைவு
நீரிணையின் இரண்டு கிமீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பாம்பன் பாலம் ஒரு பார்வை - இராமேஸ்வரம் ( Rameswaram Pamban Bridge)
- பெரிய அகன்ற படகு கடந்துசெல்லும் காட்சி
- பாம்பன் பாலம் பராமரிப்புப்பணி
- பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதல் தினமணி
- Kalam inaugurates centenary celebrations of Pamban bridge
- ராமேஸ்வரம் - சென்னை ரயிலுக்கு 'பாம்பன் எக்ஸ்பிரஸ்' பெயர் சூட்டுக: கலாம் கோரிக்கை