சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி சிறுதிருத்தம் |
No edit summary |
||
வரிசை 81: | வரிசை 81: | ||
==நினைவுச் சின்னங்கள்== |
==நினைவுச் சின்னங்கள்== |
||
[[தமிழ்நாடு அரசு]] சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் [[ |
[[தமிழ்நாடு அரசு]] சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் [[கிருஷ்ணகிரி மாவட்டம்]] தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான [[சென்னை]] [[கிண்டி]]யில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள [[தமிழ்நாடு அரசு]]க்குச் சொந்தமான மண்டபத்திற்கு [[ராஜாஜி மண்டபம்]] என்று பெயர் சூட்டியுள்ளது.[http://www.tn.gov.in/tamiltngov/memorial/rajaji.htm பார்க்க] |
||
== படைப்புகள் == |
== படைப்புகள் == |
11:51, 15 செப்தெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி | |
---|---|
படிமம்:CR-853x1024.jpg | |
முதலமைச்சர், மதராஸ் மாநிலம் | |
பதவியில் 10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954 | |
ஆளுநர் | ஸ்ரீ பிரகாசா |
முன்னையவர் | பி. எஸ். குமாரசாமி ராஜா |
பின்னவர் | கு. காமராஜர் |
இந்திய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 26 ஜனவரி 1950 – 1951 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
முன்னையவர் | சர்தார் வல்லபாய் படேல் |
பின்னவர் | கைலாஷ்நாத் கட்சு |
இந்திய கவர்னர் ஜெனரல் | |
பதவியில் 21 ஜூன் 1948 – 25 ஜனவரி 1950 | |
ஆட்சியாளர் | ஜார்ஜ் VI மன்னர் |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
முன்னையவர் | லூயி மவுண்ட்பேட்டன் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
மேற்கு வங்க ஆளுனர் | |
பதவியில் 15 ஆகஸ்ட் 1947 – ஜூன் 1948 | |
பிரதமர் | பிரபுல்ல சந்திர கோஷ், பி. சி. ராய் |
முன்னையவர் | ஃப்ரெட்ரிக் பர்ரோஸ் |
பின்னவர் | கைலாஷ்நாத் கட்சு |
முதலமைச்சர், மதராஸ் மாகாணம் | |
பதவியில் 14 ஜூலை 1937 – 9 அக்டோபர் 1939 | |
ஆளுநர் | ஜான் எர்ஸ்கின் |
முன்னையவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
பின்னவர் | ஆளுனர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 டிசம்பர் 1878 சேலம் மாவட்டம், மதராஸ் மாகாணம் |
இறப்பு | 25 டிசம்பர் 1972 (அகவை 94) சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திராக் கட்சி |
துணைவர் | அலமேலு மங்கம்மா |
முன்னாள் கல்லூரி | சென்ட்ரல் கல்லூரி, பெங்களூரு மாநிலக் கல்லூரி, சென்னை |
வேலை | வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி |
தொழில் | வழக்கறிஞர் |
சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1972),தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில் தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டடார்,இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர்கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார்.
பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
வாழ்க்கை வரலாறு
கிருஷ்ணகிரி (பழைய சேலம் மாவட்டத்தின்) இல் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி ஆவார்.[1] ராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
வகித்த பதவிகள்
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
பாரத ரத்னா
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது
இலக்கியம்
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. .
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.பார்க்க
படைப்புகள்
மேலும் அறிய
- "ராஜாஜி" - கௌசிகன்
- Rajmohan Gandhi (1997). Rajaji, A life. Penguin books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0140269673, ISBN 9780140269673..
ஆதாரங்கள்
- ↑ மணியன், தமிழருவி (டிசம்பர் 25, 2013). "ராஜாஜி என்ற ராஜரிஷி". தி தமிழ் இந்து. Archived from the original on டிசம்பர் 25, 2013. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 25, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help)
புற இணைப்புகள்
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- Pages using infobox officeholder with unknown parameters
- பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
- தமிழக அரசியல்வாதிகள்
- தமிழ் நாட்டு முதலமைச்சர்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
- 1878 பிறப்புகள்
- 1972 இறப்புகள்
- சுதந்திரவாத சிந்தனையாளர்கள்
- அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்
- தமிழ் கலைச்சொற் அறிஞர்கள்
- தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்