சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 18: வரிசை 18:
{{New Testament people}}
{{New Testament people}}


[[பகுப்பு:புதிய ஏற்பாட்டு நபர்கள்]]
[[பகுப்பு:திருமுறை நற்செய்திகளில் வரும் நபர்கள்]]
[[பகுப்பு:சிலுவைப் பாதை]]
[[பகுப்பு:சிலுவைப் பாதை]]

07:01, 10 ஆகத்து 2014 இல் கடைசித் திருத்தம்

சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவும் காட்சியினை சித்தரிக்கும் பீட்டர் பவுல் ரூபென்ஸ் வரைந்த ஓவியம்

சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசு சிலுவையில் அறையப்பட கூட்டிச்செல்லப்பட்ட போது உரோமை காவலர்களின் கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையைச் சுமந்தவர் ஆவார். இந்த நிகழ்வானது ஒத்தமை நற்செய்தி நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்..[2]

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவின் சிரேன் ஊரைச்சேர்ந்தவர் இவர். அக்காலத்தில் இப்பகுதி குரேக்க குடியேற்றப்பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 100,000 யூதர்கள் இங்கு வசித்திருக்கக்கூடும். கிறித்தவம் பரவிய முதல் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். முதலாம் யூத-உரோமைப் போரின் முடிவில் தப்பியோடிய களகக்காரர்கள் இங்கு தஞ்சம் புகுந்தனர் என்பர்.

சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் எருசலேமில் ஒரு தொழுகைக் கூடம் வைத்திருந்தனர். திருவிழாக்களுக்கு எருசலேமுக்கு வரும் சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் இக்கூடத்திற்கு வருவது வழக்கமாகும்.[4]

இவருக்கு அலக்சாந்தர் மற்றும் ரூபு என்னும் பெயரில் இரு புதல்வர்கள் இருந்ததாக மாற்கு நற்செய்தி 15:21 குறிக்கின்றது. இதனால் இவர்கள் துவக்ககால கிறித்தவர்களால் நன்கு அறியப்பட்டவராகவும் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16:13இல் பவுல் குறிப்பிடும் ரூபு இவரின் புதல்வர் எனவும் சிலர் கருதுகின்றனர்.[5] வேறு சிலர் திருத்தூதர் பணிகள் 11:20இல் குறிப்பிடப்படும் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கருக்கு நற்செய்தியை அறிவித்த சிரேன் ஊரைச் சேர்ந்த சிலரில் இவரும் அடங்குவார் என்கின்றனர்.[4] எனினும் சீமோன் என்னும் பெயரை வைத்து இவர் யூதர் என கணிக்க இயலாகு என்றும் அலக்சாந்தர் மற்றும் ரூபு ஆகியன பொதுவாக வழங்கப்பட்ட பெயர்கள் ஆனதால் இக்குறிப்புகளில் உள்ள நபர் இவர் அல்ல என்று கூறுகின்றனர்.[6]

சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுவது சிலுவைப் பாதையில் ஐந்தாம் நிலையாகும்.[7] ஞானக் கொள்கையினை உடைய சிலர் இயேசுவுக்கு பதில் சீமோனே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக நம்புகின்றனர்.[8] இத்தகைய கொள்கையினர் இயேசுவுக்கு மனித உடல் இல்லை என்றும் நம்புவது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mark 15:21-22
  2. 2.0 2.1 Matthew 27:32
  3. Luke 23:26
  4. 4.0 4.1 T.A. Bryant, compiler. Today's Dictionary of the Bible. Minneapolis: Bethany House, 1982. Page 580.
  5. Walter W. Wessel. "Mark." In The Expositor's Bible Commentary, Frank E. Gaebelein, ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 778.
  6. D. A. Carson, "Matthew". In The Expositor's Bible Commentary, Frank E. Gaebelein, ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 575.
  7. The liturgy for the fifth Station of the Cross at catholic.org
  8. Willis Barnstone and Marvin Meyer, eds. The Gnostic Bible. Boston: Shambhala, 2002. Pages 465, 469-470.