பத்மா சுப்ரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →விருதுகள்: மேற்கோள் சேர்ப்பு! |
சி →வாழ்க்கை வரலாறு: *திருத்தம்* |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
==வாழ்க்கை வரலாறு== |
==வாழ்க்கை வரலாறு== |
||
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் |
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. சுப்ரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] பாடல் எழுதக்கூடியவர். பத்மா, [[வழுவூர் பி. இராமையா பிள்ளை]]யிடம் பரதம் பயின்றார். |
||
==கல்வி== |
==கல்வி== |
||
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்ட குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார். |
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்ட குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார். |
05:06, 6 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன[சான்று தேவை].
வாழ்க்கை வரலாறு
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. சுப்ரமணியம் - மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பாடல் எழுதக்கூடியவர். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.
கல்வி
பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்ட குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1983
- இசைப்பேரறிஞர் விருது, 1994[1] ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை
- பத்மசிறீ
- பத்ம பூஷன், 2003
- கலைமாமணி விருது - தமிழக அரசிடமிருந்து
- காளிதாஸ் சம்மான் - மத்தியப் பிரதேச அரசிடமிருந்து
- நாத பிரம்மம் - நாரத கான சபா, சென்னை.
- பாரத சஸ்த்ர ரக்சாமணி
- நேரு விருது (1983) - ஒருங்கிணைந்த இரஷ்யா அரசு
- புகுகா ஆசிய கலாச்சாரப் பரிசு (Fukuoka Asian Cultural Prize) - ஜப்பான், ஆசியாவில் மேம்பாட்டிற்காகவும், ஒருங்கிணைப்பிற்காகவும் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக.
மேற்கோள்கள்
பிற இணைப்புகள்
- இந்தியா'ஸ் 50 மோஸ்ட் இல்லுஸ்டிரியஸ் வுமன்(India's 50 Most Illustrious Women) (ISBN 81-88086-19-3) இந்திரா குப்தாவால் எழுதப்பட்ட புத்தகம்.
- May 2011 தேதிகளைப் பயன்படுத்து
- 1943 பிறப்புகள்
- பரதநாட்டியக் கலைஞர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- பத்ம பூசன் விருது பெற்ற தமிழர்கள்
- பத்ம ஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்
- வாழும் நபர்கள்
- இசையமைப்பாளர்கள்
- தமிழக எழுத்தாளர்கள்
- ஆங்கில எழுத்தாளர்கள்
- பாடகிகள்
- சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்
- தமிழ்ப் பெண் ஆடற் கலைஞர்கள்