பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"{{Infobox Christian leader | type = ஆயர் | hon..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 72: | வரிசை 72: | ||
[[பகுப்பு:இலங்கையின் உரோமன் கத்தோலிக்க ஆயர்கள்]] |
[[பகுப்பு:இலங்கையின் உரோமன் கத்தோலிக்க ஆயர்கள்]] |
||
[[பகுப்பு:யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்கள்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர்கள்]] |
||
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]] |
12:13, 5 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்
அதி வணக்கத்துக்குரிய பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை | |
---|---|
யாழ்ப்பாண ஆயர் | |
படிமம்:Bastiampillai Deogupillai.jpg | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஆட்சி துவக்கம் | 18 டிசம்பர் 1972 |
ஆட்சி முடிவு | 6 சூலை 1992 |
முன்னிருந்தவர் | ஜெரோமி எமிலியானுஸ்பிள்ளை |
பின்வந்தவர் | தோமஸ் சவுந்தரநாயகம் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | கரம்பொன், ஊர்காவற்துறை, இலங்கை | 9 ஏப்ரல் 1917
இறப்பு | 25 ஏப்ரல் 2003 | (அகவை 86)
படித்த இடம் | புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி Pontifical Urbaniana University இலங்கைப் பல்கலைக்கழகம் |
அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை (Jacob Bastiampillai Deogupillai, 9 ஏப்ரல் 1917 - 25 ஏப்ரல் 2003) என்பவர் இலங்கைத் தமிழ் மதகுருவும், ரோமன் கத்தோலிக்க முன்னாள் யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
தியோகுப்பிள்ளை இலங்கையின் வடக்கே ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற ஊரில் 1917 ஏப்ரல் 9 இல் பிறந்தார்.[1][2][3] கரம்பொன் கன்னியர் மடம், ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியைக் கற்றி இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும்,[2][4] உயர்கல்வியை ரோம் நகரில் உள்ள பரப்புரைக் கல்லூரியிலும் தொடர்ந்தார்.[4] பின்னர் அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டமும், கல்வியலுக்கான டிப்புளோமா பட்டமும் பெற்றார்.[4]
பணி
1941 டிசம்பரில் தியோகுப்பிள்ளை உரோமை நகரில் குருக்களாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பின்னர் இலங்கை திரும்பி கரவெட்டியில் மதகுகுருவாகப் பணியாற்றினார்.[2] ஆசிரியராக சில காலம் பணியாற்றியப் பின்னர் அனுராதபுரம் புனித யோசப்பு கல்லூரியில் பணிப்பாளர் ஆனார்.[1][2] அதன் பின்னர் கரவெட்டி புனித இருதயக் கல்லூரி, இளவாலை புனித ஹென்றி கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.[1][2] 1961 இல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, தியோகுப்பிள்ளை பணிப்பாளர் பதவியில் இருந்து விலகி, இளவாலை கோவிற்பற்று குருக்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[4]
தியோகுப்பிள்ளை பெப்ரவரி 1967 ஆம் ஆண்டில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் பதில் ஆயராக நியமிக்கப்பட்டார்.[1][2][3] 1972 டிசம்பரில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][3][4][5] 1992 சூலையில் அவர் ஆயர் பதவியில் இருந்து இளைப்பாறினார்.[3][4]
இளைப்பாறிய பின்னர் தியோகுப்பிள்ளை யாழ்ப்பாணம் புனித மார்ட்டின் மதப்பள்ளியில் குடியிருந்தார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]
தியோகுப்பிள்ளை 23 ஏப்ரல் 25 இல் காலமானார்.[2][3][6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 48. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "Bishop Deogupillai passes away". தமிழ்நெட். 26 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8859.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bishop Jacob Bastiampillai Deogupillai". Catholic Hierarchy.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Emmanuel, S. J. (2 May 2003). "Bishop Deogupillai - a man of sturdy faith and courageous leadership". Daily News (Sri Lanka). http://www.dailynews.lk/2003/05/02/fea03.html.
- ↑ "History". யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்.
- ↑ "Late Bishop's services recalled at funeral". தமிழ்நெட். 28 ஏப்ரல் 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8874.