ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உறவுமுறைகள்: திருத்தம்
வரிசை 24: வரிசை 24:
==உறவுமுறைகள்==
==உறவுமுறைகள்==


இச்சாதியில் [[கிளைகள்]] (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக [[தங்கமுடி(மகுடம்)]] என்ற கொத்துக்கு அரசங்கிளையும், சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது.அது போல் [[ஓணான்]] என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது.மற்றும் சிங்கம் கொத்து வீரங்கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும்,ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் <ref>குடும்பம்,அரசு,தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 '''ஏங்கல்ஸ்'''</ref> அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள [[நன்குடி வேளாளர்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]] போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.பி 1900களில் ஆறுகொத்து <ref>Journ,Anthrop,Inst,XXXIII,1903 (castes and Tribes of Southern INDIA-Volume-V)</ref> என்றும் ஒருகொத்துக்கு மூன்று கிளைகள் என்றும் இருந்துள்ளது.தற்போது இவை விரிவாக முழுத் தகவல்கள் கிடைக்க வில்லை.
இச்சாதியில் [[கிளைகள்]] (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக [[தங்கமுடி(மகுடம்)]] என்ற கொத்துக்கு அரசங்கிளையும்(அகத்தீஸ் கிளை), சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது.அது போல் [[ஓணான்]] என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது.மற்றும் சிங்கம் கொத்து வீரங்கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும்,ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் <ref>குடும்பம்,அரசு,தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 '''ஏங்கல்ஸ்'''</ref> அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள [[நன்குடி வேளாளர்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]] போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.பி 1900களில் ஆறுகொத்து <ref>Journ,Anthrop,Inst,XXXIII,1903 (castes and Tribes of Southern INDIA-Volume-V)</ref> என்றும் ஒருகொத்துக்கு மூன்று கிளைகள் என்றும் இருந்துள்ளது.தற்போது இவை விரிவாக முழுத் தகவல்கள் கிடைக்க வில்லை.


==பண்பாடு==
==பண்பாடு==

17:09, 28 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

வரலாறு

மறவர் சாதியில் பல உட்பிரிவுகளில் ஒன்றுதான் ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் என்பது. கொண்டை கட்டி மறவர்[1] அதாவது பெண்களைப் போன்றே தலைமுடியை கொண்டை போட்டுக் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி கொண்டையங் கோட்டை மறவர் என்றாகியது. தற்போதுள்ள இராமநாதபுரம்,விருதுநகர் மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது)அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு,இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. அகப்பைநாடு மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர் என்பது ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர் சாதி என்றாயிற்று.

சிறப்புப் பெயர்கள்

மறவர்கள் தங்களின் பெயருக்கு பின்னால் சிறப்புப் பெயர்களை தேவர்,சேர்வை,அம்பலம் எனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.

சங்க கால சிறப்பு

சங்க கால புலவர்களில் நக்கீரத் தேவர் இறைவனோடு வாதிட்ட சம்பவம் கவனிக்கத்தக்கது தருமி என்ற புலவருக்கு பொன் முடிப்பு பெற்றுத் தர வேண்டி இறைவனே புலவராக வந்து வாது செய்த நிகழ்வு,

உறவுமுறைகள்

இச்சாதியில் கிளைகள் (branches) எனும் பிரிவு உள்ளது. அதாவது ஒரு கொத்து இரு கிளைகள் கொண்டது. ஊதாரணமாக தங்கமுடி(மகுடம்) என்ற கொத்துக்கு அரசங்கிளையும்(அகத்தீஸ் கிளை), சேது கிளையும்(சேது பாண்டி) உள்ளது.அது போல் ஓணான் என்ற கொத்துக்கு வெட்டுமன் கிளையும் (வெட்டுமான்), வீனியங் கிளையும் (வீரியன்) உள்ளது.மற்றும் சிங்கம் கொத்து வீரங்கிளையும் உள்ளது. ஒரு கொத்தைச் சேர்ந்த இரு கிளைகளுக்குளும்,ஒரே கிளைகளுக்குள்ளும் திருமண உறவு இருக்காது. இந்த சாதியினரிடையே தமிழகத்தில் பெரும்பான்மையான சாதிகளில் இருக்கும் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை. தாய் வழி சமூகம் [2] அமைப்பின் தன்மையை இன்றளவும் அதாவது தாயின் வழியைப் பிள்ளைகளுக்குக் கொண்டுள்ள நன்குடி வேளாளர், இல்லத்துப்பிள்ளைமார் போன்ற சாதியினரைப் போல் இவர்களுக்கு தாயின் கிளையே மகனுக்கும் மகளுக்கும் உள்ளதால் அக்காள் மகள் சகோதர உறவாகும். அதாவது அம்மா, மாமா, ஆகியோர் சகோதரப் பிரிவினராகவும், தந்தை, அத்தை போன்றோர் சம்பந்தப் பிரிவினராகவும் இருக்கும்.கி.பி 1900களில் ஆறுகொத்து [3] என்றும் ஒருகொத்துக்கு மூன்று கிளைகள் என்றும் இருந்துள்ளது.தற்போது இவை விரிவாக முழுத் தகவல்கள் கிடைக்க வில்லை.

பண்பாடு

இந்த சாதிப் பெண்கள் காது வளர்த்து (தமிழ் பண்பாட்டுக்கு உட்பட்ட நடப்பு நிகழ்வுகள்) தண்டட்டி (பாப்படம்) அணியும் வழக்கம் உடையவர்கள். இந்த வழக்கம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி வட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் தற்போதும் நடைமுறையில் உள்ளது.

புகழ் பெற்றவர்கள்

1)"பசும்பொன்" முத்துராமலிங்கத் தேவர்
2)'''யோகி முத்துமணி சுவாமிகள்'''

அடிக்குறிப்புகள்

  1. Mr.F.Fawcett-Madras Journ Lit.Science,IV,1836.(castes and Tribes of Southern INDIA-Volume-V)
  2. குடும்பம்,அரசு,தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றம்- 1800 ஏங்கல்ஸ்
  3. Journ,Anthrop,Inst,XXXIII,1903 (castes and Tribes of Southern INDIA-Volume-V)

வெளி இணைப்பு