கோச்சடையான் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
'''கோச்சடையான்''' என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.[[ரசினிகாந்து]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் தற்போது படப்பதிவிற்கு பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. |
'''கோச்சடையான்''' என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.[[ரசினிகாந்து]] கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் தற்போது படப்பதிவிற்கு பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. |
||
==கதை சுருக்கம்== |
|||
தன் தந்தை கோச்சடையானின் மரணத்திற்கு காரணமான மன்னன் ரிஷிகோடகனை, மகன் ராணா பழிவாங்குவதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதை. |
|||
கோட்டைப் பட்டிணத்தின் படைத் தளபதி கோச்சடையானின் (ரஜினி) வீரதீர செயல்களால் அண்டை நாடுகள் பலவற்றை கைப்பற்றுகிறான் மன்னன் ரிஷிகோடகன். ஆனால், மக்களும் அரசவை மந்திரிகளும் மன்னனைவிட கோச்சடையானையே அதிகம் புகழ்வதால், ரிஷிகோடகனுக்கு கோச்சடையான் மீது பொறாமை ஏற்படுகிறது. |
|||
ஒரு சமயம் பாரசீக நாட்டிற்குச் சென்று ஏராளமான குதிரைகளையும், போர்க்கருவிகளையும் வாங்கிவிட்டு கடல்வழியாகத் திரும்பி வந்துகொண்டிருக்கும் கோச்சடையான் படை மீது எதிரி நாடான கலிங்கபுரி வீரர்கள் ரகசியத் தாக்குதல் தொடுக்கிறார்கள். கோச்சடையான் படை அவர்களை விரட்டியடித்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உணவுப் பொருட்களில் விஷத்தை கலந்துவிட்டுப் போகிறார்கள் கலிங்கபுரி வீரர்கள். இது தெரியாமல் அதை உண்ணும் ஏராளமான படைவீரர்கள் உயிருக்குப் போராட, வேறு வழியில்லாமல், கலிங்கபுரி மன்னனிடமே தஞ்சமடைகிறான் கோச்சடையான். போர் வீரர்களையும், குதிரைகளையும், போர்க் கருவிகளையும் தன் நாட்டிலேயே விட்டுச்செல்வதாக இருந்தால், விஷத்தை முறிப்பதற்கு உதவி செய்வதாக மன்னன் வாக்குறுதி தருகிறான். தன் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன் கோட்டைப் பட்டிணத்திற்கு திரும்புகிறான் கோச்சடையான். |
|||
நீண்ட நாட்களாக பொறாமை கொண்டிருக்கும் மன்னன் ரிஷிகோடகன் இந்த தருணத்தைப் பயன்படுத்தி கோச்சடையான் மீது தேச துரோகப் பழியைச் சுமத்தி அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான். சாவதற்கு முன் தன் இரண்டு பிள்ளைகளான ராணா, சேனாவிடம் கலிங்கபுரியில் விட்டுவிட்டு வந்த தன் நாட்டு வீரர்களை நீங்கள்தான் திரும்பக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் கோச்சடையான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோகப் பழியை ராணா எப்படி போக்குகிறார் என்பதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் வரலாற்று கதை! |
|||
==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |
15:05, 23 மே 2014 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அண்மிக்கும் போது இதன் விவரங்கள் மாற்றமடையலாம். |
கோச்சடையான் | |
---|---|
படிமம்:கோச்சடையான்.jpg | |
இயக்கம் | சௌந்தர்யா ஆர். அஸ்வின் |
தயாரிப்பு | சுனில் லுலா |
கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ராஜீவ் மேனன் |
கலையகம் | ஈராஸ் இன்டர்நேசனல் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | மே 23, 2014 |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
கோச்சடையான் என்பது சௌந்தர்யா அஸ்வின் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும்.ரசினிகாந்து கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானியம் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. படப்பதிவு முடிவுற்ற நிலையில் தற்போது படப்பதிவிற்கு பிந்தைய பணிகள் லண்டன், ஹாங்காங் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கதை சுருக்கம்
தன் தந்தை கோச்சடையானின் மரணத்திற்கு காரணமான மன்னன் ரிஷிகோடகனை, மகன் ராணா பழிவாங்குவதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் கதை.
கோட்டைப் பட்டிணத்தின் படைத் தளபதி கோச்சடையானின் (ரஜினி) வீரதீர செயல்களால் அண்டை நாடுகள் பலவற்றை கைப்பற்றுகிறான் மன்னன் ரிஷிகோடகன். ஆனால், மக்களும் அரசவை மந்திரிகளும் மன்னனைவிட கோச்சடையானையே அதிகம் புகழ்வதால், ரிஷிகோடகனுக்கு கோச்சடையான் மீது பொறாமை ஏற்படுகிறது.
ஒரு சமயம் பாரசீக நாட்டிற்குச் சென்று ஏராளமான குதிரைகளையும், போர்க்கருவிகளையும் வாங்கிவிட்டு கடல்வழியாகத் திரும்பி வந்துகொண்டிருக்கும் கோச்சடையான் படை மீது எதிரி நாடான கலிங்கபுரி வீரர்கள் ரகசியத் தாக்குதல் தொடுக்கிறார்கள். கோச்சடையான் படை அவர்களை விரட்டியடித்தாலும், அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் உணவுப் பொருட்களில் விஷத்தை கலந்துவிட்டுப் போகிறார்கள் கலிங்கபுரி வீரர்கள். இது தெரியாமல் அதை உண்ணும் ஏராளமான படைவீரர்கள் உயிருக்குப் போராட, வேறு வழியில்லாமல், கலிங்கபுரி மன்னனிடமே தஞ்சமடைகிறான் கோச்சடையான். போர் வீரர்களையும், குதிரைகளையும், போர்க் கருவிகளையும் தன் நாட்டிலேயே விட்டுச்செல்வதாக இருந்தால், விஷத்தை முறிப்பதற்கு உதவி செய்வதாக மன்னன் வாக்குறுதி தருகிறான். தன் வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன் கோட்டைப் பட்டிணத்திற்கு திரும்புகிறான் கோச்சடையான்.
நீண்ட நாட்களாக பொறாமை கொண்டிருக்கும் மன்னன் ரிஷிகோடகன் இந்த தருணத்தைப் பயன்படுத்தி கோச்சடையான் மீது தேச துரோகப் பழியைச் சுமத்தி அவனுக்கு மரண தண்டனை கொடுக்கிறான். சாவதற்கு முன் தன் இரண்டு பிள்ளைகளான ராணா, சேனாவிடம் கலிங்கபுரியில் விட்டுவிட்டு வந்த தன் நாட்டு வீரர்களை நீங்கள்தான் திரும்பக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டு உயிரை விடுகிறார் கோச்சடையான். தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோகப் பழியை ராணா எப்படி போக்குகிறார் என்பதுதான் ‘கோச்சடையான்’ படத்தின் வரலாற்று கதை!
நடிகர்கள்
- ரஜினிகாந்த்
- தீபிகா படுகோண்
- ருக்மணி
- சரத்குமார்
- ஆதி
தயாரிப்பு
இப்படத்தை ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் (மேற்பார்வை) ஆகிய பொறுப்புக்களை கே. எஸ். ரவிக்குமார் ஏற்றுள்ளார். இப்படத்திற்கு இசை அமைக்கும் பணியை ஏ. ஆர். ரகுமான் ஏற்றுள்ளார்.
பெயர் காரணம்
கி.பி. 710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவனது தந்தையார் பெயர் அரிகேசரி மாறவர்மன். பட்டம் சூட்டியது : கி.பி. 710
சேரர்களையும் சோழர்களையும் விஞ்சி, மராட்டிய மாநிலம் வரை சென்று அங்கு மங்களாபுரத்தில் (அது தற்போது மங்களூர் என்றழைக்கப்படுகிறது) தனது இராச்சியத்தை நிறுவியவன் இந்த கோச்சடையன். அதன் பின்னர் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்களே ‘கோச்சடையானின்’ கதை எனக் கருதப்படுகிறது[1].
சௌந்தர்யா விளக்கம்
கோச்சடையான் என்பது பாண்டிய மன்னனின் பெயர் என்பது ஒருபுறமிருந்தாலும், படத்தை இயக்கும் சௌந்தர்யா அஸ்வின், இந்தப் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணாவுக்கு முந்தைய பாகம்தான் கோச்சடையான் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்[2]
கதாநாயகி தீபிகா படுகோன்
கோச்சடையான் படத்தில் முதலில் கத்ரீனா கைஃப் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தகுந்த தேதிகளை கொடுக்க முடியாததன் காரணமாக அவருக்குப் பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதே போல, ரஜினியின் தங்கை வேடத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான சினேகாவும் நீக்கப்பட்டார் [3]. அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர்.
கோச்சடையான் முதல் பார்வை
படத்தின் முதல் வடிவமைப்பை இயக்குநர் சௌந்தர்யா ரஜினி மாசி 5-ம் தேதி வெளியிட்டார். இரண்டாவது வடிவமைப்பை மாசி 12-ம் தேதி வெளியிட்டார். இப்படத்தின் நிலைப்படங்கள் (stills) [4] ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கோச்சடையான் ஜனவரி 2014 பொங்கல் திருநாளில் வெளியாக இருந்தது.[5] ஆனால் சில காரணங்களால் வெளியாகவில்லை.
இசை
வெளியீடு
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' இசை வெளியீடு மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும்.
பாடல்கள்
இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பிற்கான பாடல்களின் பட்டியல், 2014 மார்ச் மாதம் 5ம் நாள் டுவிட்டரில் வெளியானது. [6].
Untitled |
---|
தமிழ் பதிப்பு
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "எங்கே போகுதோ வானம்..." | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:53 | |
2. | "மெதுவாகத்தான்.." | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் | 05:09 | |
3. | "மாற்றம் ஒன்றுதான் மாறாதது.." | ரஜினிகாந்த், ஹரிசரன், வி.உமாசங்கர்(ஜதி) | 05:56 | |
4. | "மணப்பெண் சத்தியம்.." | லதா ரஜினிகாந்த் | 03:58 | |
5. | "இதயம்.." | ஸ்ரீநிவாஸ், சின்மயி | 04:34 | |
6. | "எங்கள் கோச்சடையான்.." | குழுவினர் | 04:07 | |
7. | "மணமகனின் சத்தியம்.." | ஹரிசரண் | 04:06 | |
8. | "ராணாவின் கனவு." (பின்னனி இசை) | இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர் | 04:01 | |
9. | "கர்ம வீரன்.." | ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா | 06:46 |
தெலுங்கு பதிப்பு
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "சூதம் ஆகாசம் அந்தம்.." | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
2. | "மனசாயீரா.." | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் | ||
3. | "எந்தோ நிஜமே.." | ஹேமசந்திரா, மனோ | ||
4. | "ஏடேமைனா சகா.." | லதா ரஜினிகாந்த் | ||
5. | "ஹிரிதயம்.." | மனோ, சின்மயி | ||
6. | "விக்ரமசிம்முதிவே.." | குழுவினர் | ||
7. | "ஏடேமைனா சகி.." | உன்னிகிருஷ்ணன் | ||
8. | "ராணாவின் கனவு" (பின்னனி இசை) | இலண்டன் பிலாஹார்மோனிக் குழுவினர் | ||
9. | "கர்ம வீருடு.." | ஏ. ஆர். ரகுமான், ஏ. ஆர். ரிஹானா |
வெளியீடு
2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [8] தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
மேற்கோள்கள்
- ↑ "'கோச்சடையன்' அறிவிப்பு!". 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
- ↑ http://www.envazhi.com/?p=29828.
- ↑ http://entertainment.oneindia.in/tamil/news/2012/sneha-rajinikanth-kochadaiyaan-130212.html
- ↑ http://www.envazhi.com/rajinis-kochadayan-first-look/
- ↑ "கோச்சடையானுடன் என்ன தைரியத்தில் மோதுகின்றன விஜய், அஜித் படங்கள்?". TamilNews24x7. பார்க்கப்பட்ட நாள் 2013-11-23.
- ↑ நாக ரத்னா. "ரஜிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படப் பாடல்களின் பட்டியல் வெளியீடு". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கோச்சடையானுக்காக தயக்கத்துடன் பாடிய ரஜினிகாந்த்: ஏ. ஆர். ரகுமான்". NDTV. செப். 8, 2013. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12389&id1=3#sthash.VOtp4zbE.dpuf தினகரன் பார்த்த நாள் 04.02.2014