காலகாலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°08′07″N 77°02′04″E / 11.13528°N 77.03444°E / 11.13528; 77.03444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 79: வரிசை 79:


[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோவில்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோவில்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]

11:25, 20 மே 2014 இல் நிலவும் திருத்தம்

காலகாலேசுவரர் கோவில்
காலகாலேசுவரர் கோவில் is located in தமிழ் நாடு
காலகாலேசுவரர் கோவில்
காலகாலேசுவரர் கோவில்
ஆள்கூறுகள்:11°08′07″N 77°02′04″E / 11.13528°N 77.03444°E / 11.13528; 77.03444
பெயர்
பெயர்:கோவில்பாளையம் காலகாலேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:கோவில்பாளையம்
கோயில் தகவல்கள்
மூலவர்:காலகாலேசுவரர்
தாயார்:கருணாகரவல்லி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

காலகாலேசுவரர் கோவில், (kalakaleswarar Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோவில். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார்.

அமைவிடம்

கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 209) கோயம்புத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கோவில்பாளையம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.

கோவில்

இது ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு சிவன் காலகாலேசுவரராக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி). கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.

சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு. கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

மூலவர் காலகாலேசுவரர்
உற்சவர்
அம்மன்/தாயார் கருணாகரவல்லி
தல விருட்சம்
தீர்த்தம் காலபொய்கை தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை 1000-2000 வருடங்களுக்கு
புராண பெயர் கௌசிகபுரி

பெயர்க் காரணம்

உயிர்களை அழிக்கும் தனது சக்தியை இழந்த காலன் (யமன்) இத்தலத்தில் மணலும் நுரையாலுமான லிங்கம் செய்து வழிபட்டுத் தன் அழிக்கும் ஆற்றலை மீண்டும் பெற்றார் என்பது தொன் வரலாறு. இதன் காரணமாக இக்கோவிலில் சிவன் காலகாலேசுவரர் எனப்படுகிறார். காலகாலேசுவரை வழிபட ஆயுள் பலமாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், தம்பதியினர் அறுபதாம் திருமணம் செய்துகொள்கின்றனர்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலகாலேசுவரர்_கோயில்&oldid=1662768" இலிருந்து மீள்விக்கப்பட்டது