சிறுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{reflist} |
{{reflist}} |
||
{{இலக்கிய வடிவங்கள்}} |
{{இலக்கிய வடிவங்கள்}} |
21:33, 10 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்
சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
அறிமுகம்
முடிவில் திருப்பம் உடைய சிறிய கதைவடிவம். பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.
தமிழில் சிறுகதைவடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள்.[1] ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும்.
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.
தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரர்சாவின் பொம்மை], லா.ச.ராமாமிருதம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தரராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு அழகிரிசாமி[ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்
- வீரமாமுனிவர், பாமரர் படிப்பதற்காக, பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் எழுதிய "பரமார்த்த குருவின் கதை".
- இஃசுலாமிய மதத்தின் சூபிகள் என்பவர், சித்தர்களோடு ஒப்பிட்டுப் பேசப்படுபவர்கள். அவர்கள் கூறியக் கதைகளுள் ஒன்று. - 'சூபிக் கதை'
- இரசிய நாட்டின் மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கருதப்படும் பத்துக்கதைகளை இங்கு காணலாம்.
வெளி இணைப்புகள்
- சிறுகதை ஒரு சமையல்குறிப்பு - ஜெயமோகன்
- ‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் - ஜெயமோகன்
- எழுதப் போகிறவர்கள் - ஜெயமோகன்
- படைப்பியக்கம் - ஜெயமோகன்
- சிறுகதைகள் - பிரபல ஆசிரியர்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை படிக்க.
- அழியாச்சுடர்கள் - சிறந்த சிறுகதைகளை வாசிக்க.
மேற்கோள்கள்
இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் |