நரந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 38: வரிசை 38:
{{Reflist}}
{{Reflist}}
{{Commons|Citrus aurantium|நரந்தம்}}
{{Commons|Citrus aurantium|நரந்தம்}}

{{சங்ககால மலர்கள்}}


[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]

18:06, 12 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

நரந்தம்
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
பேரினம்: Citrus
இனம்: C. × aurantium
இருசொற் பெயரீடு
Citrus × aurantium
லின்., 1753[1]

நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறூகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

நரந்த பழம்

சங்க காலம்

இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.

  • சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று. [2]
  • சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம். [3]
  • சோலையில் பூத்துக் குலுங்கும். [4]
  • காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும். [5]
  • நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம். [6]
  • நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று. [7]
  • அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார். [8]
  • நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர். [9] [10] [11]
  • இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம். [12]
  • புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம். [13]
  • நரந்த மணம் வீசும் கூந்தல். [14]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "Citrus × aurantium L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 1999-12-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
  2. குறிஞ்சிப்பாட்டு – அடி 94
  3. பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் – அகநானூறு 141
  4. பரிபாடல் 7-11
  5. பரிபாடல் 16-15
  6. நரந்தம் பல்காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ் – புறநானூறு 302
  7. நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் பொருநராற்றுப்படை 237
  8. புறநானூறு 235
  9. நரந்தம் நாறும் குவையிருங் கூந்தல் குறுந்தொகை -52 அகநானூறு 266
  10. கலித்தொகை 54-5
  11. நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைய நரந்தம் அரைப்ப, நறிஞ்சாந்து மருக - மதுரைக்காஞ்சி 553
  12. கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கும் அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் - பதிற்றுப்பத்து 11
  13. மணிமேகலை 3-162
  14. குறுந்தொகை 52, பனம்பாரனார்,குறிஞ்சி திணை
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நரந்தம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரந்தம்&oldid=1617021" இலிருந்து மீள்விக்கப்பட்டது