ஜன கண மன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
(edited with ProveIt) *விரிவாக்கம்* |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Indian National Anthem - Jana Gana Mana (HI BN EN).webm|thumb| ஜன கண மன(HI BN EN)]] |
|||
{{Infobox Anthem |
{{Infobox Anthem |
||
|title = জন গণ মন |
|title = জন গণ মন |
07:46, 19 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
জন গণ মন | |
படிமம்:Janaganamana-score.png இசையெழுத்து | |
இந்தியா தேசியக் கீதம் கீதம் | |
இயற்றியவர் | இரவீந்திரநாத் தாகூர் |
இசை | இரவீந்திரநாத் தாகூர் |
சேர்க்கப்பட்டது | 1950 |
இசை மாதிரி | |
இசைக்கருவி |
ஜன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.
பாடல்
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
தமிழாக்கம்[1]
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
வரலாறு
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.[2] தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.[3]
பாடும் முறை
- தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
- தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.[4]
மரியாதை
இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.[5]
தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும் தேசிய கீதமம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை.
வெளி இணைப்புகள்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "ஜன கன மன - குடியரசு தினத்தை முன்னிட்டு..." கூடல். 2008-01-25. பார்க்கப்பட்ட நாள் 2009-08-21.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ "தேசிய கீதத்துக்கு வயது 100!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
- ↑ "இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
- ↑ "தேசிய கீதம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.
- ↑ "ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2013.