பாலி சாம் நரிமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:மாநிலங்களவை உறுப்பினர்கள் using HotCat |
சி added Category:மும்பையைச் சேர்ந்தவர்கள் using HotCat |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
[[பகுப்பு:இந்திய வழக்கறிஞர்கள்]] |
[[பகுப்பு:இந்திய வழக்கறிஞர்கள்]] |
||
[[பகுப்பு:மாநிலங்களவை உறுப்பினர்கள்]] |
[[பகுப்பு:மாநிலங்களவை உறுப்பினர்கள்]] |
||
[[பகுப்பு:மும்பையைச் சேர்ந்தவர்கள்]] |
03:51, 3 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
பாலி சாம் நரிமன் (பிறப்பு 1929 சனவரி 10) உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞர். இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தின் முதுபெரும் வழக்குரைஞர்.1950இல் பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.பல உயரிய பதவிகளை வகித்தார். 1999ஆம் ஆண்டில் பாராளுமன்ற (மாநிலங்களவை) உறுப்பினர் ஆனார். நீதித்துறையிலும் அரசியல் துறையிலும் அவருடைய கருத்துகள் செவிமடுக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினார்.
1972 மே முதல் 1975 ஜூன் வரை இந்திய கூடுதல் ஜெனரல் என்னும் பதவியில் இருந்தார். 'நெருக்கடி நிலை' இந்திய அரசு பிறப்பித்ததால் அப்பதவியிலிருந்து விலகினார். 1976ஆம் ஆண்டில் அரசியல் சட்ட 42ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்தார். அரசியல் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களிலும்ஊழல் ஒழிப்பு, நதிநீர் சிக்கல் போன்ற விதயங்களிலும் தம் சட்ட ஆலோசனைகளைத் தெரியப்படுத்தினார். பார்சி இனத்தைச் சேர்ந்த நரிமன் 1955இல் பாப்சி காண்ட்ராக்டர் என்னும் பெண்மணியை மணந்தார்.
விருதுகள்
- பத்ம பூஷன் விருது (1991)
- பத்ம விபூஷன் விருது (2007)
- குரூபர் பரிசு (2002)