உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 88: | வரிசை 88: | ||
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது. |
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது. |
||
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்]] நகரை கைப்பற்றினார்,[[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது. |
[[முதலாம் சுலைமான்]](1520-1566) 1521இல் [[பெல்கிறேட்]] நகரை கைப்பற்றினார்,[[ஹங்கேரி]] பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.1526 இல் வரலாற்று முக்கியத்துவம்மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது. |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
15:07, 11 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
உதுமானியப் பேரரசு Ottoman Empire Osmanlı İmparatorluğu دولت عالیه عثمانیه Devlet-i Âliye-yi Osmâniyye | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1299–1922 | |||||||||||
'குறிக்கோள்: 'دولت ابد مدت Devlet-i Ebed-müddet ("The Eternal State") | |||||||||||
நிலை | பேரரசு | ||||||||||
தலைநகரம் | சோகூட் (1299–1326) பூர்சா (1326–65) எடையர்ன் (1365–1453) இஸ்தான்புல் (1453–1922) | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||||
சுல்தான்கள் | |||||||||||
• 1281–1326 | முதலாம் உதுமான் | ||||||||||
• 1918–22 | ஆறாம் முகம்மது | ||||||||||
Grand Viziers | |||||||||||
• 1320–31 | அலாவுத்தீன் பாசா | ||||||||||
• 1920–22 | அகுமத் தௌபீக் பாசா | ||||||||||
வரலாறு | |||||||||||
• அமைப்பு | 1299 | ||||||||||
• Interregnum | 1402–1413 | ||||||||||
• 1. அரசியலமைப்பு | 1876-1878 | ||||||||||
• 2. அரசியலமைப்பு | 1908-1918 | ||||||||||
• பிரிவு | நவம்பர் 17 1922 | ||||||||||
பரப்பு | |||||||||||
1680 | 5,500,000 km2 (2,100,000 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 1856 | 35350000 | ||||||||||
• 1906 | 20884000 | ||||||||||
• 1914 | 18520000 | ||||||||||
• 1919 | 14629000 | ||||||||||
நாணயம் | அக்சே, குரூஸ், லீரா | ||||||||||
| |||||||||||
உதுமானியப் பேரரசு (ஒட்டோமான் பேரரசு, Ottoman Empire, 1299–1922, துருக்கி: Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu) என்பது பல்லின, பல் மத துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே தலமையின் கீழ் வட-மேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்பட்டது.கொன்ஸ்தான்து நோபில் நகரம் சுல்தான் இரண்டாம் முஹம்மத்தால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ம் – 17ம் நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
பெயர்
உதுமானிய துருக்கிய மொழியில்,பேரரசு என்பது தெவ்லெத்-இ-அலிய்யி-யீ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه),அல்லது மாற்றீடாக உஸ்மான்லி தெவ்லெத் (عثمانلى دولتى)என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.நவீன துருக்கி மொழியில் இது 'Osmanlı Devleti or Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்தைய கணக்குகளில், "ஒட்டோமன்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களும் உள்மாற்றீடாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன.இரட்டையாக எழுதும் இம்முறை 1920-1923 காலப்பகுதயில்,அங்காரா நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன்,அன்றிலிருந்து துருக்கி(Turkey)என்ற தனித்த சொல் உத்தியோகபுர்வ வழங்கப்பட்டு வருகின்றது.
வரலாறு
எழுச்சி(1299-1453)
துருக்கிய செல்ஜூக் ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர்,கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழந்த அனத்தோலியா பகுதியானது ஒரு சீறற்ற சுதந்திரப்பிரதேசமாகப் பிரிந்ததுடன், பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள்(Ghazi emirates)என அழைக்கபடலாயின.இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால்(1258–1326) நிர்வகிக்கப்பட்டது.உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒட்டோமன் என்ற பெயர் பெறப்பட்டது.முதலாம் உஸ்மான்,துருக்கியக் குடியிருப்புக்களை பிஸன்டைன் இராச்சியத்தின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின்வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் பல்கேன் மேலாக விரிவடைய ஆரம்பித்தது.உஸ்மானின் மகன், உர்ஹான் 1324இல் பூர்சா நகரை கைப்பற்றியதுடன்,அதனை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார்.அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வட-மேற்குஅனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பிஸன்டைன் இராச்சியம் (Byzantine Empire)இழந்தது.முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான சேர்பியர்களின் அதிகாரம் முடிவுக்குகொண்டுவரப்பட்டதுடன்,இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம்பதிப்பதற்கு காரணமாக அமைந்தது.1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில், மத்திய காலத்தின் பாரிய சிலுவைப்படை எனக்கருதப்படும் படையினருக்கு துருக்கிய உதுமானியர்களின் முன்னேற்றகரமான வெற்றியை தடுக்கமுடியவில்லை.
பல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கமானது,கொன்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் மூலோபாய நோக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
வளர்ச்சி (1453–1683)
விரிவாக்கம் மற்றும் உச்சநிலை(1453–1566)
இரண்டாம் முராத்தின் மகனான இரண்டாம் முகம்மத் ஆடசிப்பிரதேசத்தையும், இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன்,29 மே 1453 அன்று கொன்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றினார்.உதுமானிய அரசாங்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி தேவாலயங்களை அதன் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு இரண்டாம் முகம்மத் அனுமதி வழங்கினார்.ஏனெனில்,ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கு மற்றும் இறுதி பிஸன்டைன் இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிழவிவந்நது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசானது ஒரு விரிவைடயும் காலத்தினுள் நுழைந்தது.இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன்,ஆடசிப் பொறுப்பு திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் சென்றது.உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகளின் ஊடாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை போர்த்துக்கேய பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது.
முதலாம் சுலைமான்(1520-1566) 1521இல் பெல்கிறேட் நகரை கைப்பற்றினார்,ஹங்கேரி பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது.1526 இல் வரலாற்று முக்கியத்துவம்மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றிபெற்றதன் பின்னர்,இன்றைய ஹங்கேரி மற்றும் ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது.
வெளி இணைப்புகள்