மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். |
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். |
||
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) |
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். |
||
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம். |
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம். |
05:21, 23 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இராத்திரி என்பது இருட்காலம். உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும். அதனால், அந்த இரவை சிவராத்திரி என்பர். ராத்திரி என்பதற்குப் பூசித்தல் என்பதும் ஒரு பொருளாகும். சிவனைப் பூசிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி ஆகும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.
சிவராத்திரி விரத வகைகள்
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.
- நித்திய சிவராத்திரி
- மாத சிவராத்திரி
- பட்ச சிவராத்திரி
- யோக சிவராத்திரி
- மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
சிவராத்திரி விரத நியதிகள்
- சிவரத்திரி தினத்தின் முதல் நாளில் ஒருவேளை உணவு உண்ணுதல் வேண்டும்.
- சிவரத்திரி தினத்தில் உபவாசம் இருந்து இரவு நான்கு சாமமும் நித்திரையின்றி சிவபூசை செய்தல் வேண்டும்.
- சிவபூசை செய்ய இயலாதவர் நித்திரையின்றி, நான்கு சாமமும் சிவாலய தரிசனம் செய்தல் வேண்டும்.திருநீறு தரித்து, உருத்திராக்கம் அணிந்து ஸ்ரீ பஞ்சாட்சரம் செபித்தல், ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்தல், சிவராத்திரி புராணம், சிவபுராணம், என்பவற்றையும் சிவபெருமானைப் பற்றிக் கூறும் கதைகளையும் படித்தல், கேட்டல் என்பவற்றில் ஈடுபட வேண்டும்.
- இலிங்கோற்பவ காலத்தில் சிவனை விசேடமாக வழிபடுதல் வேண்டும். இலிங்கோற்பவ காலம் என்பது திருமால், பிரம்மன் அறியாதபடி சோதியாக நின்ற பரம்பொருள், குளிர்ந்து இலிங்க வடிவில் காட்சி தந்த காலத்தைக் குறிப்பது. சிவராத்திரி இரவில் பதினான்கு நாழிகைக்கு மேல் (11.30 - 12.15) இரு நாழிகை (1 நாழிகை=24 நிமிடங்கள்) பரம்பொருள் இலிங்கத்தில் தோன்றியருளினார். அதனால், அக்காலத்தில் சிவபூசை செய்து வழிபடுதல் வேண்டும்.
- சிவராத்திரியின் மறுநாள் அதிகாலையில் நீராடி, பாறணை செய்தலும் சிவனடியார்களுக்கு மாகேசுர பூசை செய்தலும் வேண்டும்.
- சிவராத்திரி விரதத்தைத் தொடர்ந்து பன்னிரண்டு அல்லது இருபத்தினான்கு வருடங்கள் அனுட்டித்தல் வேண்டும். சிவராத்திரி விரத நாளில் உபவாசம் உத்தமம்; நீரேனும் பாலேனும் அருந்துதல் மத்திமம்; பழம் உண்பது அதமம். சிவராத்திரி தினத்தில் நான்கு சாமமும் நித்திரை ஒழிக்க இயலாதவர், இலிங்கோற்பவ காலம் நீங்கும் வரையாயினும் நித்திரை ஒழித்தல் வேண்டும்.
நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்
முதல் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
- அபிஷேகம் - பஞ்சகவ்யம்
- அலங்காரம் - வில்வம்
- அர்ச்சனை - தாமரை, அலரி
- நிவேதனம் - பருப்பன்னம்
- பழம் - வில்வம்
- பட்டு - செம்பட்டு
- தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
- மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
- புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
- ஒளி- புட்பதீபம்
இரண்டாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
- அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
- அலங்காரம் - குருந்தை
- அர்ச்சனை - துளசி
- நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
- பழம் - பலா
- பட்டு - மஞ்சள் பட்டு
- தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
- மணம் - அகில், சந்தணம்
- புகை - சாம்பிராணி, குங்குமம்
- ஒளி- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
- அபிஷேகம் - தேன்,பாலோதகம்
- அலங்காரம் - கிளுவை, விளா
- அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்
- நிவேதனம் - எள்அன்னம்
- பழம் - மாதுளம்
- பட்டு - வெண் பட்டு
- தோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி
- மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
- புகை - மேகம், கருங் குங்கிலியம்
- ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
- வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
- அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
- அலங்காரம் - கரு நொச்சி
- அர்ச்சனை - நந்தியாவட்டை
- நிவேதனம் - வெண்சாதம்
- பழம் - நானாவித பழங்கள்
- பட்டு - நீலப் பட்டு
- தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
- மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
- புகை - கர்ப்பூரம், இலவங்கம்
- ஒளி- மூன்று முக தீபம்
சிவராத்திரி பற்றிய புராணக் கதைகள்
- சிவன் இலிங்கத்தில் தோன்றிய நாள்.
- பிரம்மா, விஷ்ணுக்களிடையே சிவன் சோதி வ்டிவில் தோன்றிய நாள்.
- புனர் உற்பத்திக்காகத் தேவி, பூசை செய்த நாள்.
என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகள் அவ்ற்றுள் சில. இவ்வாறு கதைகள் இருப்பினும் சிவபூசையை ஏற்றுக்கொள்வதற்காக, சிவபெருமான் சோதிப் பிழம்பாய்த் தோன்றிய நாள் சிவராத்திரி என்பர். அதனால் அன்று சிவபூசை செய்வதே மிக சிறப்பானதாகும்.
இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்
சிவராத்திரி விரதத்துடன் தொடர்புடைய சோதிப்பிளம்பின் அடி நுனி தேடிய புராணக்கதையில் சிறப்பான தத்துவ உண்மை அடங்கியுள்ளது. அறிவு எல்லை மீறும் போது அகங்காரமாகி விடுகின்றது. செல்வம் எல்லை மீறும் போது செருக்கு ஏற்படுகின்றது. எனவேதான் அறிவுக் கடவுளான பிரம்மாவும் செல்வத்தின் அதிபதியான திருமாலும் அகங்காரம், செருக்கு என்பவற்றால் உந்தப்பட்டு, தாமே பெரியவர் என்று போட்டியிட்டனர். அதனால், அவர்களால் சிவபெருமானைக் காண முடியாது போயிற்று. அவரை அறிவாலும் செல்வத்தாலும் அளவிட்டு அறிந்து விட முடியாது; அன்பினாலும் பக்தியினாலும் மட்டுமே அடைய முடியும் என்பதை உணர்த்துவதே சிவரத்திரி விரதத்தின் தத்துவமாகும்.
விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்
- திருக்கேதீச்சரப் பதிகங்கள்
- திருவண்ணாமலைப் பதிகங்கள்
உசாத்துணைகள்
- விரத விதிகள் - திருக்கேதீச்சரத் திருக்கோயில் மகாசிவராத்திரி மட பரிபாலன சபை, மன்னார். இலங்கை