செய்யாறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags பயனரால் செய்யாறு ஆறு, செய்யாறு (ஆறு) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

21:36, 12 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

செய்யாறு ஆறு தமிழ் நாட்டின்‌‌‌‌‌‌‌ திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவாகல ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் உருவாகும் இந்த ஆறு பாலற்றின் துணை ஆறு ஆகும்.

ஜவ்வாது மலை தொடரின் நசமலையில் தோன்றி மேற்க்கு தெற்க்‌காக பாய்ந்து பின்பு செங்கம் அருகில் வடகிழக்காக திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்க்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காக பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் போளுருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இனைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகதோப்பு அணையிலிருந்து உருவாகும் கமண்டல நாக நதி எனும் துணை ஆறு வாழபாந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்கு கிழக்காக ஓடி காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் பாலாறுடன் இணைந்து வாங்களா விரிகுடா கடலில் கலக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான போளூர், ஆரணி மற்றும் செய்யாறு அமைந்துளன. செய்யாறு நகரின் ஊடே பாய்வதால் இந்த ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் திருஞானசம்பந்தரால் பாட பெற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யாறு_(ஆறு)&oldid=1515762" இலிருந்து மீள்விக்கப்பட்டது