நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Parvathisriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
|||
வரிசை 56: | வரிசை 56: | ||
'''English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn''' |
'''English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn''' |
||
==தறி== |
|||
'''''தமிழகத்தில் நெசவு இயந்திரம் நவீனமயமாவதற்கு முக்கியத்துவம்: சைமா தலைவர் தகவல்'''' |
|||
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் மூலம் நெசவு இயந்திரங்கள் நவீனமயமாவதற்கு முக்கியத்துவம் தரப்படுவதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் டி.ராஜ்குமார் தெரிவித்தார். |
|||
கோவை செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: நாட்டிலுள்ள பஞ்சாலைகளில் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. தமிழகப் பஞ்சாலைகளில் சுமார் 20 சதவீதம் வரை நவீனப்படுத்தப்படுகின்றன. |
|||
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் இப்போது நெசவு இயந்திரங்களை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியில் நெசவு இயந்திரங்களை அமைப்பதற்குத் தரப்படும் 20 சதவீத மூலதன மானியம் 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழுப்பு நிறத் துணி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. |
|||
தமிழகத்தில் உள்ளவர்கள் கைத்தறி மற்றும் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். |
|||
சீனாவில் ஷட்டில்லெஸ் தறிகள் இருப்பதால் துணி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மதிப்புக் கூட்டிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சுமார் 25 சதவீதம் பேர் மதிப்புக் கூட்டிய பொருள்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். |
|||
நூல் பற்றாக்குறை இல்லை: இந்தியாவில் நூற்பாலைகளில் 5 கோடி கதிர்கள் உள்ளன. இதில் சுமார் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. மாதத்துக்கு 33 கோடி கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டின் தேவை 20 கோடி கிலோ. 11 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதியுள்ளவை இருப்பில் இருக்கும். எனவே நூல் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. |
|||
நூல் ஏற்றுமதி: இந்தியாவில் நூல் ஏற்றுமதி தொடர்பான நிலையான கொள்கைகள் இல்லை. இதனால் நூல் ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்திய நூலை இறக்குமதி செய்து வந்த பலர், தற்போது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். |
|||
பஞ்சாலைகள் துவக்க சலுகை: மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் புதிய ஜவுளிக் கொள்கைகளை அறிவித்துள்ளன. மகாராஷ்டிரத்தில் பஞ்சாலைகளைத் தொடங்குவோருக்கு வங்கி வட்டியில் 5 சதவீதத்தை மத்திய அரசும் மீதியை மாநில அரசும் ஏற்பதாக அறிவித்துள்ளன. இதுதவிர மூலதன மானியம், வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. |
|||
அடுத்த 2 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் 30 லட்சம் கதிர்களும், குஜராத்தில் 35 லட்சம் கதிர்களும், பிற மாநிலங்களில் 30 லட்சம் கதிர்களும் கொண்ட பஞ்சாலைகள் தொடங்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1.5 கோடி கதிர்களைக் கொண்ட பஞ்சாலைகள் தொடங்கப்படும். கோவையில் இருந்தும் சிலர் வெளி மாநிலங்களில் பஞ்சாலைகள் தொடங்க உள்ளனர். |
|||
மின்னுற்பத்தி: சைமா சார்பில் தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் மூலம் சுமார் 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யவும், இதற்காக ரூ.1250 கோடி செலவாகும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சைமா 50 சதவீதம், மத்திய அரசு 30 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் வழங்கும். இத்திட்டத்துக்கு விரைவில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைக்கும். |
|||
கடலூரில் சைமா சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிராசஸிங் பூங்காவில் 40 சதவீத வேலைகள் முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கடலில் செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் டி.ராஜ்குமார். |
|||
==கைத்தறி நெசவு== |
==கைத்தறி நெசவு== |
05:09, 29 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
நெசவுத் தொழில்நுட்பம் அல்லது நெசவுத் தொழில் இது மக்கள் பயன்படுத்தும் உடுத்தும் உடையான ஆடை, படுக்கை விரிப்பான பாய் கம்பளம் மற்றும் சாக்கு உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் ஆகும். ஒவ்வொரு தொழிலும் அதன் மூலப்பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புகழ்பெற்றிருக்கும். பஞ்சு உற்பத்தி, விசைத்தறி பயன்பாடு, சாயமிடல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவுத் தொழில்நுட்பத்தில் அடங்கும். இது ஒரு பழந்தமிழர் தொழில்நுட்பம் ஆகும்.
தமிழர்களும் நெசவுக்கலையும்
நெசவுத் தொழில்நுட்பத்தை ஒரு கலையாகவே தமிழர்கள் பாவித்து பின்பற்றி வந்துள்ளனர். பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது.
மகாவம்சத்தில் நெசவு
இலங்கையின் வரலாற்றின் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றின் படி, இலங்கைக்கு விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணி எனும் இடத்தை வந்தடைந்ததன் பின்னர், விசயனின் நண்பர்கள் அவ்விடத்தில் தோன்றிய ஒரு பெண்ணை (யாக்கினி) பின் தொடர்ந்து ஒவ்வொருவரும் செல்கின்றனர். அங்கே குவேணி அவர்களை பொய்கை ஒன்றில் சிறைவைக்கின்றாள். கடைசியாக அவர்களை தேடி விசயன் செல்லும் போது, ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேணி நூல் நூற்றுக்கொண்டிருக்கின்றாள், எனும் தகவல் விசயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கையில் நெசவு கைத்தொழில் பற்றிய அறிவு இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. [1]
பல்வேறு பிரிவுகள்
நெசவுத்தொழில்நுட்பம் பண்டைய காலந்தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. நெசவுத்தொழில்நுட்பத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம்..
- 1. இயற்கையான பஞ்சுத்துணி நெசவுகள் (காட்டன் / பருத்தி இழை, சணல், மூங்கில் மற்றும் பல)
- 2. செயற்கை இழை பஞ்சுத்துணி நெசவுகள் (பாலியஸ்டர், விஸ்கோஸ், மற்றும் பல)
- 3. மிருக உரோம நெசவு (வுல் எனப்படும் ஆட்டிழை மற்றும் பல)
பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம்
பருத்தி இழை நெசவுத்தொழில்நுட்பம் பல படிகளை உள்ளடக்கியது....
- 1. பஞ்சடித்தல் (ஜின்னிங்)
- 2. நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங் )
- 3. நூலை பதப்படுத்துதல், சாயப்படுத்துதல் மற்றும் நெசவிற்கு தயார்படுத்துதல் (புராஸஸிங்,டையிங் மற்றும் வீவிங் பிரிபரேசன்)
பஞ்சடித்தல் (ஜின்னிங்)
விவசாயிகளிடமிருந்து வாங்கிய பருத்தியை இயந்திரம் மூலம் விதை நீக்கி பஞ்சு தனியே பிரித்தெடுக்கப்பட்டு பொதிகளாக்கப்பட்டு நூற்பாலைகளுக்கு அனுப்பும் முறை.
நூல் தயாரிப்பு (ஸ்பின்னிங்)
ஸ்பின்னிங் எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது. அவற்றை மிக எளிதாக தமிழில் சொல்வதென்பது பல சிக்கல்களை உள்ளடக்கியது…காரணம் மிகப்பல சொற்களுக்கு தமிழ் வார்த்தைகளை தேடுவதில் உள்ள சிரமம்தான்.
இது போன்ற சிரமம் உள்ள காரணத்தால் மிகப்பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளே பஞ்சாலைகளில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை (yarn). பொதுவாக எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள்.
பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.
நல்ல கனமான நூல் (coarser count) போர்வைக்கும் மெல்லிசான நூல் (finer count ) மேலாடைக்கும் பயன் படுத்தப்படுகிறது!!
நூலின் எண்ணிக்கை
ஆக, நூல் எண்ணிக்கை (yarn count) எப்படி வரையறுக்கப்படுகிறது ?
நூல் எண்ணிக்கைகளில் பலவிதங்கள் உண்டு. ஆனாலும் அதிகமாக புழக்கத்தில் உள்ள ஆங்கில எண்ணிக்கை (English count ) முறையையே நாம் எடுத்துக்கொள்வோம்.
ஆங்கில எண்ணிக்கை (English count ) - Ne
இந்த வகை கவுன்ட் முறையில் பொதுவாக நூலின் நீளம் “யார்ட்” (yard - கஜம்) என்ற அளவையில்தான் ( 1மீட்டர் - 1.09 யார்ட்- கஜம்) அளக்கப்படுகிறது…….அதே போல் நூலின் எடை பவுன்ட் (pound) என்னும் அளவையில் தான் குறிப்பிடப்படுகிறது…( 1 கிலோ கிராம் = 2.2 பவுன்ட் )
ஆக , ஒரு பவுன்ட் நூலை எடுத்து எடை போட்டு , அதில் எத்துனை 840 யார்ட், நீளமுள்ள நூல்கள் இருக்கிறதோ அதுவே அந்நூலின் கவுன்ட் (எண்ணிக்கை).
இன்னும் விரிவாகச் சொன்னால் 10 என்பது ஒரு நூலின் கவுன்ட் (எண்ணிக்கை) என்றால், அதே நூலை ஒரு பவுன்ட் எடுத்து நீளத்தை அளந்தோமானால் மொத்த நீளம் 8400 யார்ட்ஸ் (yard - கஜம்) என்பதாம்
ஆங்கிலத்தில்
English Count (Ne) = No. of 840 yards in 1 pound of yarn
தறி
கைத்தறி நெசவு
விசைத்தறி
இவற்றையும் பார்க்க
சான்றுகள்
வெளி இணைப்புகள்
- http://www.chennai.niftindia.com/ National Institute of Fashion Technology - Chennai
- http://www.intamm.com/science/index.htm#p1