திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2: வரிசை 2:


== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
== நான்கு திருவிளையாடல் புராணங்கள் ==
* [[கல்லாடம்]] 30 திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறது.
* பழைய திருவிளையாடல் புராணம் - நம்பியாண்டார் நம்பி பாடியது. 64 திருவிளையாடல்களை விரித்துக் கூறும் முதல் நூல் <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=106}}</ref>
* திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
* திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
* கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
* கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்

10:14, 16 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

திருவிளையாடற் புராணம் என்பது சிவனது திருவிளையாடல்களைக் கூறும் புராணங்கள் ஆகும். நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளன. இவற்றுள் புலியூர் நம்பி என்பவரும் பரஞ்சோதி முனிவர் என்பவரும் ஆக்கியவையே குறிப்பிடத்தக்கவை. பரஞ்சோதி முனிவர் எழுதியது சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.

நான்கு திருவிளையாடல் புராணங்கள்

  • கல்லாடம் 30 திருவிளையாடல்களைக் குறிப்பிடுகிறது.
  • பழைய திருவிளையாடல் புராணம் - நம்பியாண்டார் நம்பி பாடியது. 64 திருவிளையாடல்களை விரித்துக் கூறும் முதல் நூல் [1]
  • திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - பெரும்பற்றப் புலியூர் நம்பி
  • கடம்பவன புராணம் - தொண்டைநாட்டு இலம்பூர் வீமநாதபண்டிதர்
  • சுந்தர பாண்டியம் - தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன்
  • திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்

வரலாறு

சிவபெருமான் உமாதேவியாருக்கு சங்கர சங்கிதையை அருளிச்செய்தார்.முருகப்பெருமான் அதனை அகத்திய முனிவருக்கு அருளினார். அகத்திய முனிவர் பிற முனிவர்களுக்கு எடுத்துக்கூறினார்.திருவிளையாடற் புராணங்களில் மூர்த்தி, தல, தீர்த்த விசேடமுள்ள திருப்பூவணத்துடன் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்) தொடர்புடைய பகுதிகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.இத்தலத்திலே சிவபெருமான் புரிந்த 64 திருவிளையாடல்கள் இப்புராணத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்தி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.

64 திருவிளையாடல்கள்

திருவிளையாடற்புராணத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் தனித்தனிப் படலங்களாக விளக்கப்பட்டுள்ளன.

  1. இந்திரன் பழி தீர்த்த படலம்.
  2. வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்.
  3. திருநகரங் கண்ட படலம்.
  4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்.
  5. திருமணப் படலம்.
  6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.
  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.
  8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்.
  9. ஏழுகடல் அழைத்த படலம்.
  10. மலயத்துவசனை அழைத்த படலம்.
  11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்.
  12. உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.
  13. கடல் சுவற வேல்விட்ட படலம்.
  14. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.
  15. மேருவைச் செண்டாலடித்த படலம்.
  16. வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்.
  17. மாணிக்கம் விற்ற படலம்.
  18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.
  19. நான் மாடக்கூடலான படலம்.
  20. எல்லாம் வல்ல சித்தரான படலம்.
  21. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்.
  22. யானை எய்த படலம்.
  23. விருத்த குமார பாலரான படலம்.
  24. கால் மாறி ஆடிய படலம்.
  25. பழியஞ்சின படலம்.
  26. மாபாதகம் தீர்த்த படலம்.
  27. அங்கம் வெட்டின படலம்.
  28. நாகமேய்த படலம்.
  29. மாயப்பசுவை வதைத்த படலம்.
  30. மெய் காட்டிட்ட படலம்.
  31. உலவாக்கிழி அருளிய படலம்.
  32. வளையல் விற்ற படலம்.
  33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்.
  34. விடையிலச்சினை இட்ட படலம்.
  35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்.
  36. இரசவாதம் செய்த படலம்.
  37. சோழனை மடுவில் வீட்டிய படலம்.
  38. உலவாக் கோட்டை அருளிய படலம்.
  39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.
  40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்.
  41. விறகு விற்ற படலம்.
  42. திருமுகம் கொடுத்த படலம்.
  43. பலகை இட்ட படலம்.
  44. இசைவாது வென்ற படலம்.
  45. பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்.
  46. பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்.
  47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.
  48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்.
  49. திருவாலவாயான படலம்.
  50. சுந்தரப்பேரம் செய்த படலம்.
  51. சங்கப்பலகை கொடுத்த படலம்.
  52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்.
  53. கீரனைக் கரையேற்றிய படலம்.
  54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.
  55. சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்.
  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்.
  57. வலை வீசின படலம்.
  58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்.
  59. நரி பரியாக்கிய படலம்.
  60. பரி நரியாக்கிய படலம்.
  61. மண் சுமந்த படலம்.
  62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்.
  63. சமணரைக் கழுவேற்றிய படலம்.
  64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 106. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிளையாடல்_புராணம்&oldid=1439519" இலிருந்து மீள்விக்கப்பட்டது