பெரியவாச்சான்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9: வரிசை 9:


==ஆசிரியர்==
==ஆசிரியர்==
நஞ்சீயர், நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் [[திருவாய்மொழி]]க்கு வியாக்கியாணம் எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய வியாக்கியாணம் ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. <ref>வடமொழி இராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. இந்த உரை 24,000 எழுத்துகள் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட கிரந்தங்கள்) கொண்டது.</ref>
நஞ்சீயர், நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். <br />
நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார்.

பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் [[திருவாய்மொழி]]க்கு வியாக்கியாணம் எழுதும்படி வேண்டினார்.

அதன்படி இவர் எழுதிய வியாக்கியாணம் ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. <ref>வடமொழி இராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. இந்த உரை 24,000 எழுத்துகள் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட கிரந்தங்கள்) கொண்டது.</ref>


==மாணவர்==
==மாணவர்==

19:58, 8 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

பெரியவாச்சான்பிள்ளை இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.[1] இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.

பிறப்பு

கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர். பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்) [2] இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர். ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரைப் பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர். இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு. *இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரைச் சிறியவாச்சான் பிள்ளை என வழங்கினர். தந்தை யாமுன தேசிகர். தாயார் நாச்சியார் அம்மை.

இன்னல்

இளமையிலிருந்தே இவர் கண்ணன்மீது பற்று கொண்டிருந்தார். ஊர்மக்கள் இதனை விரும்பவில்லை. திருமணம் செய்து வைத்து இவரை மாற்ற முயன்றனர். முடியவில்லை. எனவே மூலும் பல இன்னல்கள் செய்தனர். இவற்றைத் தாங்கமுடியாமல் வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.

சிறப்பு

யாத்திரை முடிந்து திரும்பும்போது திருவேங்கடத்தில் இவரைக் கண்டவர்கள் அழைத்துவந்து சிறப்பு செய்தனர். அங்கேயே சிறிது காலம் தங்கினார். பின்னர் தன் சொந்த ஊரை நோக்கி வந்தார். வழியில் பழுத்த வைணவர் தன் முன்னோர் பூசனை செய்துவந்த சாளக்கிராமத்தை இவருக்குத் தந்தார். அதை வைத்து இவர் பூசனை செய்துவந்தார். ஒருநாள் கொள்ளிடக் கரையில் வைத்துவிட்டு நீராடியபின் திரும்பிவந்து பார்த்தபோது அந்தக் கல் காணவில்லை. அதே நினைவில் பலநாள் வந்து தேடிவருகையில் ஒருநாள் அவ்விடத்தில் கண்ணனின் மூர்த்தி உரு ஒன்று இருக்கக் கண்டாராம். அதனைக் கொண்டுவந்து பின்னர் வழிபட்டுவந்தார். அப்போதும் ஊர்மக்கள் செய்த இன்னல்களைத் தாங்கமுடியாமல் திருவரங்கம் சென்றார். அங்கும் அரங்கநாதனை நேரில் கண்டு வழிபட இயலவில்லை. இரவெல்லாம் அரங்கநாதன் நினைவாகவே பட்டினியாக இருந்தபோது அரங்கநாதன் ஒரு பெண் வடிவில் வந்து அவருக்குப் பாலும் பழமும் தந்தாராம். இதனைக் கண்ட அந்தணர்கள் இவரை அழைத்துச் சென்று அரங்கநாதனைக் கண்டு வழிபடச் செய்தனர். பின்னர் திருவரங்கத்திலேயே வாழ்ந்துவந்தார்.

ஆசிரியர்

நஞ்சீயர், நம்பிள்ளை ஆகிய ஆசிரியரிடம் இவர் பாடம் கேட்டார். நம்பிள்ளையைத் தன் ஆசிரியராகக் கொண்டார். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் திருவாய்மொழிக்கு வியாக்கியாணம் எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய வியாக்கியாணம் ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. [3]

மாணவர்

நயினாராச்சான் பிள்ளை (இவரது மருமான்), பரகால தாசர், பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸ்ரீ ரங்காச்சாரியார்) ஆகியோர் இவரது சீடர்கள்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. வைணவ உரையாசியர்கள்
  2. சோழநாட்டில் திருவெள்ளியங்குடியை அடுத்து உள்ளது. சண்டேச நாயனார் பிறந்த ஊர்.
  3. வடமொழி இராமாயணம் 24,000 சுலோகங்கள் கொண்டது. இந்த உரை 24,000 எழுத்துகள் (ஒற்று நீக்கி எண்ணப்பட்ட கிரந்தங்கள்) கொண்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியவாச்சான்பிள்ளை&oldid=1435250" இலிருந்து மீள்விக்கப்பட்டது