கிரியை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி removed Category:சைவ சமயம் using HotCat |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]] |
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]] |
||
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]] |
[[பகுப்பு:சைவ சித்தாந்தம்]] |
||
[[பகுப்பு:சைவ சமயம்]] |
03:21, 28 மே 2013 இல் நிலவும் திருத்தம்
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
- பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
- ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
- நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
- ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்
திருஞானசம்பந்த நாயனார், சண்டேஸ்வர நாயனார்.