மூன்றாம் நிலை மூலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q... |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
{{cquote| |
{{cquote| |
||
"''[[ஐராவதம் மகாதேவன்]] தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் [[மயிலை சீனி. வேங்கடசாமி]], [[நடன காசிநாதன்]], [[கே. வி. ரமேஷ்]], [[எம். டி. சம்பத்]], [[சு. இராஜவேலு]], [[சா. குருமூர்த்தி]], [[இரா. மதிவாணன்]] ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.''"}} - கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள். |
"''[[ஐராவதம் மகாதேவன்]] தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் [[மயிலை சீனி. வேங்கடசாமி]], [[நடன காசிநாதன்]], [[கே. வி. ரமேஷ்]], [[எம். டி. சம்பத்]], [[சு. இராஜவேலு]], [[சா. குருமூர்த்தி]], [[இரா. மதிவாணன்]] ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.''"}} - கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள். |
||
[[en:Tertiary source]] |
12:56, 24 மே 2013 இல் நிலவும் திருத்தம்
மூன்றாம் நிலை மூலம் என்பது முதல் நிலை மூலங்களையும் இரண்டாம் நிலை மூலங்களையும் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் மூலமாகும். இதற்கு உதாரணங்களாக காலக்கோடுகள், வழிகாட்டி கையேடுகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
மூன்றாம் நிலை தரவுக்கான எடுத்துக்காட்டு
- முதல் நிலைத் தரவு
- இரண்டாம் நிலைத் தரவு
“ | மாங்குளம் கல்வெட்டுகள் அசோகர் கல்வெட்டுக்களுக்கு காலத்தால் பிற்பட்ட கல்வெட்டாகும். | ” |
- ஐராவதம் மகாதேவன் (தன்னுடைய ஆய்வு நூலில் குறிப்பிட்ட தகவல்)
“ | ஆந்திர மாநிலத்திலுள்ள பட்டிப்போருலு என்னும் இடத்திலுள்ள கல்வெட்டை ஆராய்ந்த இந்தியத் தொல்பொருள் துறையினர், அக்கல்வெட்டை அசோகர் காலத்திற்கு முந்திய எழுத்துக்களாக இருக்கலாம் என கணித்தனர். இவ்வெழுத்து அசோகன் காலத்துக்கு முற்பட்டதாக இருக்குமாயின், படிக்கும் மொழிநெறிப்பாங்கில், மேலும் முந்திய படிநிலை ஒன்றைக் கொண்டுள்ள தமிழ் நாட்டு மீனாட்சிபுரம் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளையும் அவ்வாறே அசோகன் காலத்திற்கு முந்தியவை என்று நாம் கருதலாம். இந்தக் கருத்தை அடியில் காட்டப்படும் விளக்கம் மேலும் உறுதி செய்யும்.
'க' என்னும் எழுத்து அசோகன் கல்வெட்டிலும் தமிழ் நாட்டிலுள்ள புகழூர்க் கல்வெட்டிலும் சிலுவைக்குறி அல்லது கூட்டல் குறி வடிவில் செதுக்கப்பட்டிருக்கும். மீனாட்சிபுரம் கல்வெட்டு இந்தப் புகழூர்க் க்ல்வெட்டைவிடக் காலத்தால் முந்தியது என்னும் உண்மை எழுத்துக்களின் வடிவம், உருப்பெருக்கம் முதலானவற்றை நோக்கி எல்லா அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லது சிலுவைக்குறி காணப்படுமேயானால், அதனைக் 'க' என்று படிக்காமல் 'க்' என்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. 'க' என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி வலப்புறமாக சிறு கோடு போட்ட அமைப்புடைய எழுத்து வேண்டும். இந்த எழுத்து வடிவம் அசோகன் கல்வெட்டிலோ, புகழூர்க் கல்வெட்டிலோ காணப்படுமேயானால் 'கா' என்று நெடிலாகப் படிக்க வேண்டும். இந்த வேறுபாடு நோக்கியும் இதை அசோகனுக்கு முந்திய கல்வெட்டு எனக் கொள்ள முடியும் |
” |
- மயிலை சீனி. வேங்கடசாமி தன்னுடைய ஆய்வு நூலில் கூறியவை.
- மூன்றாம் நிலைத் தரவு
“ | ஐராவதம் மகாதேவன் தன் நூலில் அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்தது என எழுதினார். ஆனால் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்களில் கா. ராஜன் மன்னடுக்கு ஆய்வுகளின் அடிப்படையிலும் மயிலை சீனி. வேங்கடசாமி, நடன காசிநாதன், கே. வி. ரமேஷ், எம். டி. சம்பத், சு. இராஜவேலு, சா. குருமூர்த்தி, இரா. மதிவாணன் ஆகியவர்கள் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையிலும் தமிழ் பிராமி அசோகப் பிராமிக்கு முற்பட்டது என்று நிறுவினர். ஆய்வாளர்களுக்குள்ளே அசோகன் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்ததா அல்லது தமிழ் பிராமியில் இருந்து அசோகன் பிராமி வந்ததா என்பதில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், தமிழகத்தில் மட்டும் காணப்படும் கல்வெட்டுகளில் மாங்குளம் வகை கல்வெட்டுகளே முந்தியவை என்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். | ” |
- கலைக்களஞ்சியங்களில் உள்ள திரட்டப்பட்ட தகவல்கள்.