ஈ. காயத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
முதல்நிலை விரிவாக்கம் நிறைவு பெற்றது |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{underconstruction}} |
|||
'''‘வீணை காயத்ரி’''' என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பி. நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[வீணை]]க் கலைஞர் ஆவார். |
'''‘வீணை காயத்ரி’''' என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பி. நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த [[வீணை]]க் கலைஞர் ஆவார். |
||
வரிசை 24: | வரிசை 22: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
18:28, 31 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்
‘வீணை காயத்ரி’ என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பி. நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞர் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
பெற்றோர்: ஜி. அஸ்வத்தாமா (தெலுங்கு திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்), கமலா அஸ்வத்தாமா (வீணைக் கலைஞர்). காயத்ரியின் இயற்பெயர்: காயத்ரி வசந்த ஷோபா. தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை பெற்றோரிடம் கற்றார். பிறகு டி. எம். தியாகராஜனிடம் (சங்கீத கலாநிதி விருது பெற்ற பாடகர் மற்றும் வாக்கேயக்காரர்) மாணவராக பயிற்சி பெற்றார்.
தொழில் வாழ்க்கை
இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தியாகராஜா விழாவில்’ நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9ஆவது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். இதன்பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். இசைத் தொகுப்புகள் பலவற்றை ஒலிதத் துறையில் வெளியிட்டுள்ளார்.
சிறப்புகள்
- 13ஆவது வயதில் ஒரு முதுநிலைக் கலைஞராக அனைத்திந்திய வானொலி, காயத்ரிக்கு அங்கீகாரம் தந்தது (1973).
- சென்னை, திருவையாறு, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளின் மதிப்புறு இயக்குனராக 2011 ஆண்டு தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்.[சான்று தேவை]
விருதுகள்
- 1984 - தமிழக அரசின் கலைமாமணி விருது.
- 2002 - சங்கீத நாடக அகாதமி விருது,
- 2011 - ‘வாழ்நாள் சாதனை’ விருது, ரோட்டரி கிளப், சென்னை கிழக்கு